பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2020-12-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

0424/2020: குருநாகல் - ஹபரணை புகையிரதப் பாதை: குறைந்தபட்ச சேதங்களுடன் நிர்மாணித்தல்

424/2020

கௌரவ ரோஹிணி குமாரி விஜேரத்ன,— போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) குருநாகல் - ஹபரணை புகையிரதப் பாதை நிர்மாணிக்கப்படும்போது குறிபிட்ட பாதையை நிச்சயித்துக்கொள்வதற்காக 3 தடவைகள் அளவிடல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு 3ஆவது அளவிடலுக்கு அமைவாக பாதையை நிர்மாணிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் பெலிகமுவ - கலேவல – தம்புள்ள பகுதியின் நிர்மாணப் பணிகள் பொருளாதார ரீதியில் அதிக பெறுமதிவாய்ந்த காணிகள் ஊடாக மேற்கொள்ளப்படுவதால் அதிக நட்டயீட்டுத் தொகை செலுத்த வேண்டியேற்படாதா என்பதையும்;

(ii) மேற்குறிப்பிட்ட புகையிரதப் பாதைக்கான நிர்மாணத்தினை நிச்சயிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது அளவிடலுக்கு அமைவாக இப்புகையிரதப் பாதையை நிர்மாணிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பினும் அதன் முதலாவது அளவிடலுக்கு அமைவாக இப்பாதையை நிர்மாணிப்பதன் மூலம் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் குறைவடைந்து, செலுத்த வேண்டிய நட்டயீடும் குறைவடையாதா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-12-10

கேட்டவர்

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-12-10

பதில் அளித்தார்

கௌரவ காமினி லொக்குகே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks