பார்க்க

02

E   |   සි   |  

 திகதி: 2011-02-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

0910/2011: Tea estates under control of Plantation Cooperation

0910/ ’10

கெளரவ வசந்த அலுவிஹாரே,— அரச வளங்கள், தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      இலங்கைப் பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தினால் நிர்வகிக்கப்படுகின்ற தேயிலைத் தோட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்,

           (ii)    தேயிலை ஏலவிற்பனைகளின் போது மேற்படி தேயிலைத் தோட்டங்களிலிருந்து கழிவுத் தேயிலையாக மாதாந்தம் அகற்றப்படுகின்ற தேயிலையின் அளவு எவ்வளவென்பதையும்,

(iii) 2010 ஓகத்து மாதத்தில் கெலேபொக்கைத் தோட்டம் மற்றும் கல்பிஹில்ல தோட்டங்களில் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலைகளிலிருந்து உபயோகத்துக்கு பொருத்தமற்றதெனக் கூறி, தேயிலை ஏல விற்பனைகளின் போது நீக்கப்பட்ட தேயிலை கிராம்களின் அளவுகள் தனித்தனியே எவ்வளவு என்பதையும்,

(iv) இதனால் ஏற்பட்ட மொத்த நட்டம் எவ்வளவு என்பதையும்,

(v) அவ்வாறான நட்டம் ஏற்படுவதற்கு காரணமான விடயங்களை கண்டறிந்து அவ்வாறான நிலை ஏற்படாதிருக்க எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் எவை என்பதையும்,

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், என்?

 

கேட்கப்பட்ட திகதி

2011-02-25

கேட்டவர்

கௌரவ வசந்த அலுவிஹாரே, பா.உ.

அமைச்சு

அரச வளங்கள், தொழில்முயற்சி அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks