பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
206/2020
கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன்,— நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மன்னார் மாவட்டத்தின் கமத்தொழில் செயற்பாடுகளுக்குத் தேவையான நீரை விநியோகிக்கும் பிரதான நீர்ப்பாசன நீர்த்தேக்கமானது கட்டுக்கரை என்பதையும்;
(ii) இக்குளத்தின் கீழ் 162 நீரேந்துக் குளங்கள் காணப்படுகின்றன என்பதையும்;
(iii) இந்நீரேந்துக் குளங்களுக்கு 10 பிரதான கால்வாய்கள் மூலம் நீர் விநியோகிக்கப்படுகின்றதென்பதையும்;
(iv) நீண்டகாலமாக இந்த 10 கால்வாய்களும் புனரமைப்புச் செய்யப்படாமையினால் குளங்களுக்கு விநியோகிக்கப்படும் நீர் விரயமாகின்றதென்பதையும்;
(v) இதன் காரணமாக குளத்திலுள்ள நீரை வயல்களுக்கு பெற்றுக்கொள்ள முடியாமையினால் பயிர்கள் அழிவடைகின்றன என்பதையும்;
(vi) நான் மேற்படி கால்வாயை புனரமைப்புச் செய்ய வேண்டுமென பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து 5 கால்வாய்களை புனரமைப்புச் செய்வதற்கு 2019.06.06 ஆம் திகதி ரூபா 95,288,568.42 அப்போதைய அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டதென்பதையும்;
(vii) மேற்படி கால்வாய்களில் வேலைகள் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் புதிய அரசாங்கம் பதவியேற்றமையால் வேலைகளை ஆரம்பிக்காது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) ஆமெனில், பயிர்ச்செய்கைகளை உரிய வகையில் மேற்கொள்வதற்கு வழிவகை செய்யும் மேற்படி கால்வாய்களின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படும் திகதி யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-10-08
கேட்டவர்
கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், பா.உ.
அமைச்சு
நீர்ப்பாசனம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2020-10-08
பதில் அளித்தார்
கௌரவ சமல் ராஜபக்ஷ, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks