04

E   |   සි   |  

 திகதி: 2020-09-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0204/2020: இதய சத்திரசிகிச்சைகளுக்காகப் பதிவுசெய்த நோயாளிகள்: விபரம்

204/2020

கௌரவ முஜிபுர் ரஹுமான்,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இதய சத்திர சிகிச்சைகள் செய்வதற்காக அரசாங்க வைத்தியசாலைகளில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வருடக்கணக்காக காத்திருப்போர் பட்டியலில் இருக்கின்றார்கள் என்பதையும்;

(ii) இச் சத்திர சிகிச்சைகளுக்கு இலங்கையிலும் வெளிநாட்டிலும் தனியார் வைத்தியசாலைகளில் மில்லியன் கணக்கான ரூபாய் செலவழிக்கப்படுகிறது என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) ஆம் எனில் —

(i) கடந்த ஐந்து வருடங்களில் இலங்கையில் அறிக்கையிடப்பட்ட இதயம் தொடர்பான நோய்கள் எத்தனை என்பதையும்;

(ii) கடந்த ஐந்து வருடங்களில் அரசாங்க வைத்தியசாலைகளில் இதய சத்திர சிகிச்சைகளுக்காக பதிவு செய்யப்பட்ட நோயாளிகள் எத்தனை பேர் என்பதையும்;

(iii) கடந்த ஐந்து வருடங்களில் பதிவு செய்யப்பட்ட நோயாளிகளில் வருடாந்தம் எத்தனை சத்திர சிகி​ச்சைகள் நடாத்தப்படுகின்றன என்பதையும்;

அவர் சபைக்குத் தெரிவிப்பாரா?

(இ) (i) தற்போதைய நடைமுறையில் அரசாங்கம் திருப்தி அடைகிறதா என்பதையும்;

(ii) தற்போது நிலவும் இந்நிலைமையை மேலதிக முன்னேற்றத்திற்கான முக்கிய அவதானிப்புகள், சிபாரிசுகள் என்னவென்பதையும்;

அவர் சபைக்குத் தெரிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-09-22

கேட்டவர்

கௌரவ முஜிபுர் ரஹுமான், பா.உ.

அமைச்சு

சுகாதாரம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-12-01

பதில் அளித்தார்

கௌரவ (திருமதி) சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks