04

E   |   සි   |  

 திகதி: 2021-01-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0185/2021: கிளிநொச்சி தமிழ்ச்சோலை வித்தியாலயம்: பெயர் மாற்றம்

185/2020

கௌரவ சிவஞானம் சிறீதரன்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கிளிநொச்சி மாவட்டத்தில், தமிழ்ச்சோலை வித்தியாலயம் என்ற பெயரில் பாடசாலையொன்று இயங்கியதென்பதையும்;

(ii) ஆமெனில், மேற்படி பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;

(iii) மேற்குறிப்பிட்ட தமிழ்ச்சோலை வித்தியாலயத்திலிருந்து இறுதியாக க.பொ.த.(சா.த) பரீட்சைக்கும் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கும் மாணவர்கள் எந்த ஆண்டில் தோற்றியிருந்தார்கள் என்பதை வெவ்வேறாகவும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) தற்போது, மேற்குறிப்பிட்ட பாடசாலை என்ன பெயரில் அழைக்கப்படுகின்றதென்பதையும்;

(ii) இன்றளவில் இப்பாடசாலைக்குப் பயன்படுத்தப்படுகின்ற பெயர் யாரால், என்ன காரணத்திற்காக, எந்த திகதியில் மாற்றப்பட்டதென்பதையும்;

(iii) இவ்வாறு பெயர் மாற்றப்பட்ட இப்பாடசாலைக்கு ஸ்தாபகர் அல்லது நிறுவனர் என்று தனிநபரின் பெயரைப் பெற்றுக்கொள்ள முடியுமா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-01-07

கேட்டவர்

கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2021-01-07

பதில் அளித்தார்

கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks