04

E   |   සි   |  

 திகதி: 2020-09-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0180/2020: கிளிநொச்சி லங்கா சதொச கட்டடம்: விபரம்

180/2020

கௌரவ சிவஞானம் சிறீதரன்,— வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு, —

(அ) கிளிநொச்சி நகர மத்தியில் அமைந்துள்ள வரையறுக்கப்பட்ட லங்கா சதோச வர்த்தகக் கட்டடமானது முறையான அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது என்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) குறித்த கட்டடம் அமைந்துள்ள காணி எந்த நிறுவனத்திற்குச் சொந்தமானது என்பதையும்;

(ii) மேற்படி கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ள காணியானது நீண்டகாலக் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(iii) குறித்த கட்டடத்தின் தற்போதைய உரிமையாளர் யாரென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) குறித்த கட்டடத்தை​ —

(i) நிர்மாணிப்பதற்கான அனுமதியை, உரிய முறைப்படி கரைச்சி பிரதேச சபையிடமிருந்து பெறப்பட்டுள்ளதா என்பதையும்​;

(ii) அரச செலவில் நிர்மாணிக்கப்பட்டதாயின், கேள்வி மனுக்கோரல் மேற்கொள்ளப்பட்ட முறை தொடர்பான விபரங்கள் யாவையென்பதையும்;

(iii) நிர்மாணிப்புப் பணிகளுக்கான செலவு எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-09-22

கேட்டவர்

கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.

அமைச்சு

வர்த்தகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-09-22

பதில் அளித்தார்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks