01

E   |   සි   |  

 திகதி: 2020-10-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0102/2020: முத்துராஜவெல சரணாலயம்: வீடமைப்புக் கருத்திட்டம்

102/2020

கௌரவ புத்திக பத்திறண,— வனசீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) முத்துராஜவெல சரணாலயம் இலங்கையில் மிகப்பெரிய சதுப்பு நிலம் என்பதையும்;

(ii) பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக இந்த சரணாலயம் அழிவடைந்து வருகின்றது என்பதையும்;

(iii) மேற்படி சரணாலயத்தில் 406 ஏக்கர்கள் மெல்வத்த புரோபட்டி டிவலொப்பர்ஸ் எனும் கம்பனிக்கு வீடமைப்புக் கருத்திட்டத்துக்காக வழங்கப்பட்டுள்ளது என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) மேற்படி கருத்திட்டத்துக்கு ஒரு பர்ச்சஸ் காணி வழங்கப்பட்டுள்ள விலை யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) மேற்படி கொடுக்கல் வாங்கல் சட்டவிரோதமானது என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா?

(ஈ) ஆமெனில், இக்கருத்திட்டத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கை யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(உ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-10-07

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-10-07

பதில் அளித்தார்

கௌரவ சீ.பீ. ரத்நாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks