04

E   |   සි   |  

 திகதி: 2020-09-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

0095/2020: இலங்கை கடற்படையின் தற்காலிக ஊழியர்கள்: நிரந்தர நியமனம்

95/2020 கௌரவ புத்திக பத்திரண,— பிரதம அமைச்சரும், நிதி அமைச்சரும், புத்தசாசன, சமய, கலாசார அலுவல்கள் அமைச்சரும் மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (அ) (i) இலங்கை கடற் படையின் சிவில் நிருவாக உத்தியோகத்தர் அலுவலகத்திற்கு இணைந்ததாக ஒப்பந்த/ பதில்/ அமைய அடிப்படையில் பாரிய எண்ணிக்கையிலானோர் சேவையாற்றுகின்றனர் என்பதையும்; (ii) அவர்கள் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள கடற்படை பிரிவுகளில் (உப அலுவலகங்கள்) மற்றும் கடற்படை வைத்தியசாலைகளில் பணியாற்றுகின்றார்கள் என்பதையும்; (iii) நாளாந்த அடிப்படையில் அவர்களுக்கு சம்பளம் செலுத்தப்படுகின்றதென்பதையும்; அவர் அறிவாரா? (ஆ) (i) அவர்களை சேவையில் நிரந்தரமாக்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்; (ii) ஆமெனில், அந்நடவடிக்கைகள் யாவையென்பதையும்; (iii) அவர்களை சேவையில் நிரந்தரமாக்குவதற்குரிய நடவடிக்கைகள் எத்திகதியிலிருந்து மேற்கொள்ளப்படும் என்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (இ) இன்றேல், ஏன்? 1_1

கேட்கப்பட்ட திகதி

2020-09-25

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-09-25

பதில் அளித்தார்

கௌரவ சமல் ராஜபக்ஷ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks