04

E   |   සි   |  

 திகதி: 2020-11-27   பதிலளிக்கப்பட்டவைகள் 

0020/2020: பொதுச் சுகாதார கள உத்தியோகத்தர்கள்: நடுத்தர மட்டத் தொழில்நுட்பச் சேவையில் உள்ளீர்த்தல்

20/2020 கௌரவ ஹேஷா விதானகே,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) பொது சுகாதார கள உத்தியோகத்தர்களை நடுத்தர மட்டத்திலான தொழில்நுட்ப சேவையில் உள்ளீர்ப்பது தொடர்பில் 22/2002 ஆம் இலக்க சுற்றறிக்கை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ளது என்பதையும்; (ii) ஆயினும் சப்ரகமுவா மாகாண சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் சப்ரகமுவா மாகாண பகிரங்க சேவைகள் ஆணைக்குழு உத்தியோகத்தர்கள் மேற்படி சுற்றறிக்கைக்கு ஏற்ப நடவடிக்கை மேற்கொள்வதில்லை என்பதையும்; (iii) இது தொடர்பிலான சப்ரகமுவா மாகாண ஆளுநரின் கட்டளையை, சப்ரகமுவா மாகாண பகிரங்க சேவைகள் ஆணைக்குழு கவனத்தில் கொள்ளவில்லை என்பதையும்; அவர்அறிவாரா? (ஆ) சப்ரகமுவா மாகாண ஆளுநரின் கட்டளையை சப்ரகமுவா மாகாண பகிரங்க சேவைகள் ஆணைக்குழு இவ்விதம் மூன்று தடவைகளிலும் கவனத்தில் கொள்ளாமைக்கான காரணம் யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (இ) (i) சப்ரகமுவா மாகாண பொது சுகாதார கள உத்தியோகத்தர்களுக்கு செலுத்த வேண்டிய மொத்த நிலுவைப் பணத்தொகை யாது; (ii) எதிர்காலத்தில் குறிப்பிட்ட பணத்தொகையை செலுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா; என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-11-27

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

சுகாதாரம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-11-27

பதில் அளித்தார்

கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks