E   |   සි   |  

 திகதி: 2020-02-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

0115/2020: Integrity Discussion 2019 March 18

115/2020

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— பிரதம அமைச்சர் மற்றும் நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர், புத்தசாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2019 ஆம் ஆண்டு மார்ச்சு 18 ஆம் திகதியன்று, கொழும்பு செங்கிரிலா ஹோட்டலில் நடைபெற்ற "நேர்மை திறன் மாநாடு" எனப்படும் அரச சேவையில் இலஞ்சத்தை ஒழிப்பதற்கான ஐந்தாண்டு திட்டத்தை வெளியிடுவதற்காக நடைபெற்ற விழாவை ஏற்பாடு செய்த நிறுவனம் யாதென்பதையும்;

(ii) அவ் விழாவுக்கு செலவான முழுத் தொகை எவ்வளவென்பதையும்;

(iii) அவ் விழாவில் பங்கேற்ற அழைப்பு விருந்தினர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(iv) அதற்கான செலவை ஏற்ற நிறுவனம் யாதென்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-02-18

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks