logo

03

E   |   සි   |  

 திகதி: 2019-05-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

0944/2019: தெல்தொட்ட பிரதேசத்தில் நடமாடும் நீதிமன்றமொன்றைத் தாபித்தல்: நடவடிக்கை

944/ '19

கௌரவ முகமது நசீர்,— நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கண்டி நகரலிருந்து சுமார் 40 கிலோமீற்றர் தொலைவிலுள்ள தெல்தொட்ட நகரத்தில் வதியும் மக்களுக்கு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு கண்டி நகரத்திற்கு வருகை தரும் போது முகம்கொடுக்க நேரிடும் சிரமங்கள் மற்றும் அசௌகரியங்களை போக்கும் நோக்கில் தெல்தொட்ட பிரதேசத்திற்கு நடமாடும் நீதிமன்றமொன்றை தாபிப்பதற்கு பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டிருந்ததென்பதையும்;

(ii) அதற்கு மத்திய மாகாண சபையின் கீழுள்ள தற்போது மூடப்பட்டுள்ள பாடசாலைக் கட்டிடமொன்றை வழங்குவதற்கு மாகாண கல்வி அமைச்சு இணக்கத்தினை தெரிவித்துள்ளதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) பாத்தஹேவாஹெட்ட மற்றும் தெல்தொட்ட பிரதேச செயலகப் பிரிவுகளிலும் அதனை சுற்றியுள்ள பிரதேசத்திலும் வதியும் மக்களின் நீதிமன்ற நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்கான ஆற்றலை கருத்திற்கொண்டு தெல்தொட்ட நகரத்தில் நடமாடும் நீதிமன்றமொன்றை தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-05-10

கேட்டவர்

கௌரவ முஹம்மது நசீர், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2019-08-20

பதில் அளித்தார்

கௌரவ (திருமதி) சட்டத்தரணி தலதா அதுகோரல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks