04

E   |   සි   |  

 திகதி: 2011-01-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0783/2011: Recruitments to the Civil Security Department

0783/ ’10 கெளரவ அனோமா கமகே,— பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (அ) (i) 2005 சனவரி முதல் 2010 மார்ச் 31 ஆம் திகதி வரை கிழக்கு மாகாணத்திலிருந்து சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு புதிதாக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட படைவீரர்களின் எண்ணிக்கையும் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட திகதிகளையும் மாவட்ட மட்டத்தில் வெவ்வேறாக யாவை என்பதையும், (ii) அவ்வாறு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட சிவில் பாதுகாப்பு படைவீரர்களில் பல்வேறு விபத்துக்களால் மரணமடைந்தவர்களினதும் அங்கவீனர் நிலைக்கு தள்ளப்பட்டவர்களினதும் எண்ணிக்கை எவ்வளவென்பதையும், (iii) மரணமடைந்த சிவில் பாதுகாப்புப் படைவீரர்களின் வாழ்க்கைத் துணைவர்கள், பிள்ளைகள் மற்றும் அங்கவீன நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளவர்களுக்காக அரசாங்கத்தினால் செயற்படுத்தப்பட்டுள்ள நலனோம்புகைச் சேவைகள் யாவையென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2011-01-20

கேட்டவர்

கௌரவ (டாக்டர் திருமதி) அனோமா கமகே, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks