04

E   |   සි   |  

 திகதி: 2019-03-12   பதிலளிக்கப்பட்டவைகள் 

0584/2019: 2011 இன் 43 ஆம் இலக்கச் சட்டத்தினால் அசௌகரியத்துக்குள்ளான முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்கள்: நிவாரணம்

584/ '19

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன,— அரச தொழில் முயற்சிகள், மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டப் பிரேரணை இலக்கம் 206 இன் படி, 2011 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, செயற்பாடு குறைவாகவுள்ள தொழில்முயற்சிகளுக்கும் அல்லது குறைவாகப் பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்களுக்கும் புத்துயிரளித்தல் சட்டத்தின் மூலம் அசௌகரியத்திற்கு உள்ளாக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முயற்சிகளின் பெயர் பட்டியலொன்றை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

(ii) 2011 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் அசௌகரியத்துக்கு உள்ளான தொழில்முயற்சிகளுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கு அல்லது வசதியளிப்பதற்கு அரசாங்கத்தினால் பின்பற்றப்பட்ட செயன் முறைகள் யாவை என்பதையும்;

(iii) மேற்படி வரவு செலவுத் திட்ட பிரேரணைக்கு அமைவாக, உள்நாட்டு மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்களை பாதுகாப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அல்லது சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்படும் புதிய சட்ட விதிகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-12

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

அமைச்சு

அரச தொழில் முயற்சிகள், மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-03-12

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks