04

E   |   සි   |  

 திகதி: 2019-03-11   பதிலளிக்கப்பட்டவைகள் 

0583/2019: தேயிலை மற்றும் இறப்பர் செய்கைகளில் ஈடுபட்டுள்ள கம்பனிகளுக்கான வரி விடுவிப்பு: இழந்த வரி வருமானம்

583/ '19

கெளரவ (கலாநிதி) பந்துல குணவர்தன,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவு இலக்கம் 161 இன் பிரகாரம் தேயிலை மற்றும் இறப்பர் கைத்தொழிலை ஊக்குவிப்பதற்காக மேற்படி செய்கைகளில் ஈடுபட்டுள்ள கம்பெனிகளுக்கு இரண்டு வருடங்களுக்கான வரி விடுவிப்பு வழங்கப்பட்டுள்ளதா;

(ii) மேற்படி முன்மொழிவுக்கிணங்க அத்தகைய வரி விடுவிப்பினைப் பெற்றுக்கொண்ட கம்பெனிகளின் பட்டியலை சமர்ப்பிப்பாரா;

(iii) மேற்படி வரிவிடுவிப்பு வழங்கப்பட்டதன் மூலம் அரசாங்கம் இழந்த வரி வருமானம் எவ்வளவு;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-11

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-03-11

பதில் அளித்தார்

கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks