04

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0563/2019: Relief for people affected by drought North Western Province

563/ '19

கெளரவ துஷார இந்துனில் அமரசேன,— பொது நிருவாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கடந்த சில மாதங்களில் வடமேல் மாகாணத்தில் கடுமையான வறட்சி நிலவியதை அறிவாரா என்பதையும்;

(ii) அவ்வாறாயின், அக்காலப்பகுதியில் கல்கமுவ தேர்தல் தொகுதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(iii) வறட்சி நிவாரணம் பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(iv) இவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொதியிலிருந்த உலர் உணவுப் பொருட்களின் விலைகள் சந்தை விலையை விடவும் அதிகமென்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதை அறிவாரா என்பதையும்;

(v) அவ்வாறாயின், அது தொடர்பாக ஆராய்ந்து அவசியமான நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-09

கேட்டவர்

கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

அமைச்சு

பொது நிருவாக, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கால்நடை வளங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks