02

E   |   සි   |  

 திகதி: 2019-03-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0512/2019: அம்பாறை மெதடிஸ்த ஆலயம்: காணி உரிமப்பத்திரம்

512/ '19

கௌரவ விமலவீர திசாநாயக்க,— காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) அம்பாறையில் அமைந்துள்ள மெதொடிஸ்த ஆலயம் அமைக்கப்பட்டு எழுபது வருடங்களாகின்றது என்பதையும்;

(ii) மேற்படி வழிபாட்டுத்தலம் அமைந்துள்ள காணிக்கு இதுவரையில் சட்ட ரீதியான ஆவணம் கிடைக்கப்பெறவில்லை என்பதையும்;

(iii) 2009 ஆம் ஆண்டு முதல் தேவாலயத்திற்கான நீண்ட கால குத்தகையினைக் கோரி, தேவையான ஆவணங்களைத் தயார்செய்து காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதையும்;

(iv) மேற்படி கோரிக்கை பற்றிய அனைத்து ஆவணங்களும் அம்பாறை பிரதி காணி ஆணையாளர் அலுவலகத்தின் ஊடாக காணி ஆணைாயாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) இதற்கமைய, ஆயிரக்கணக்கான மக்களது மதக் கடமைகளை நிறைவேற்றும் இத்தேவாலயத்திற்கு நீண்டகால காணி உரிமப்பத்திரத்தை வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-08

கேட்டவர்

கௌரவ விமலவீர திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-05-21

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks