04

E   |   සි   |  

 திகதி: 2019-06-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0453/2019: இலங்கையின் மூத்த பிரசைகள்: நலனோம்புகைச் செயற்பாடுகள்

453/ '19

கௌரவ ஆனந்த அலுத்கமகே,— ஆரம்ப கைத்தொழில்கள் மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) வயது முதிர்ந்த ஆட்களுக்கான தேசிய பேரவை மற்றும் வயது முதிர்ந்தோர் தேசிய செயலகத்தின் கடமைகள் யாவையென்பதையும்;

(ii) 2017 ஆம் ஆண்டில் பொதுமக்கள் நலநோம்புகைக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் யாவையென்பதையும்;

(iii) மேற்படி வேலைத்திட்டத்திற்காக செலவிடப்பட்ட பணத்தொகை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) தற்போது இலங்கையின் முதியோர் சனத்தொகை அதிகரிக்கின்றது என்பதையும்;

(ii) முதியோர் சனத்தொகையில் பெரும்பாலானவர்களுக்கு வாழ்வதற்கு எத்தகைய வருமானமும் இல்லை என்பதையும்;

(iii) இவர்களுக்கு வருமானம் பெறும் வழிமுறைகள் தொடர்பான அறிவு போதுமானதாக இல்லை என்பதையும்;

(iv) பிள்ளைகள் அவர்களை பராமரி்காமல் கைவிடுவதன் காரணமாக அவர்கள் அநாதரவாகியுள்ளனர் என்பதையும்,

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(இ) ஆமெனில், அதற்கான தீர்வுகள் யாவையென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-06-21

கேட்டவர்

கௌரவ ஆனந்த அலுத்கமகே, பா.உ.

அமைச்சு

ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-09-17

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks