04

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0441/2019: Disabled persons in Kalutara District

441/ '19

கௌரவ ஜயந்த சமரவீர,— ஆரம்ப கைத்தொழில்கள் மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2018.09.01 ஆம் திகதியன்றுள்ளவாறு களுத்துறை மாவட்டத்தில் இனங்காணப்பட்ட அங்கவீனமுற்ற நபர்களின் எண்ணிக்கை, அங்கவீனத்தின் தன்மை, பால்நிலை, அங்கவீன நிலைமையானது பிறப்பின் மூலம் ஏற்பட்டதா அல்லது விபத்தின் மூலம் ஏற்பட்டதா என்பனவற்றை வயதின் அடிப்படையில் வெவ்வேறாகக் குறிப்பிடுவாரா என்பதையும்;

(ii) மேற்படி ஒவ்வொரு அங்கவீனமுற்ற நபரினதும் பெயர், முகவரி, பொறுப்பாளரின் பெயர், கிராம உத்தியோகத்தர் பிரிவு வெவ்வேறாக யாவை என்பதையும்;

(iii) பிரதேச செயலகங்களின் ஊடாக அங்கவீனமுற்ற நபர்கள் பெற்றுக் கொள்ளும் உதவித்தொகையின் அளவு மற்றும் அவர்களின் அங்கவீனத்தின் தன்மை வெவ்வேறாக யாவை யாதென்பதையும்;

(iv) உதவி கிடைக்கவேண்டியிருந்தும் உதவியினைப் பெறாத நபர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

(v) மேற்படி (IV) இல் குறிப்பிடப்பட்டுள்ள குழுவினர் சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-05-24

கேட்டவர்

கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.

அமைச்சு

ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks