04

E   |   සි   |  

 திகதி: 2019-02-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0402/2019: Lands for displaced by earth slip at Kiribathgala kanda from Kiribathgala state owned estate

402/ '18

கெளரவ வாசுதேவ நாணாயக்கார,— பொது நிருவாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பெல்மடுல்ல, கிரிபத்கல மலையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மேற்படி கிராமத்தில் சுமார் 30 குடும்பங்கள் இருப்பிடங்களை இழந்துள்ளனர் என்பதையும்;

(ii) அனர்த்தத்துக்கு ஆளான குடும்பங்களுக்கு மாற்றுக் காணிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பது கிராமத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தொம்பகம்மன எனும் பிரதேசத்திலாகும் என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) இவ்வாறு தூரப் பிரதேசங்களில் வழங்கப்பட்டுள்ள காணிகளுக்குப் பதிலாக மேற்படி கிராமத்திற்கு அருகே அமைந்துள்ள கிரிபத்கல அரச பெருந்தோட்டத்திலிருந்து காணிகளைப் பெற்றுக் கொடுக்குமாறு இவர்கள் கோரியுள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றாரா என்பதையும்;

(ii) ஆமெனில், இவர்களுக்கு கிரிபத்கல அரச பெருந்தோட்டத்திலிருந்து காணிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-20

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

பொது நிருவாக, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கால்நடை வளங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks