01

E   |   සි   |  

 திகதி: 2019-03-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

0399/2019: மகாவலி `எச்' வலய விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிவாரணம்: விபரம்

399/ '18

கெளரவ எஸ்.சி. முத்துகுமாரண,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) 2010 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை,

(i) மகாவலி 'எச்' வலயத்திற்கு நீர்ப்பாசன நீர் கிடைக்கின்ற மகாவலியின் மேற்பக்க நீர்த்தேக்கங்களைச் சூழவுள்ள பிரதேசங்களுக்கு கிடைத்த மழைவீழ்ச்சி ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் யாது என்பதையும்;

(ii) மேற்படி காலப்பகுதியில் பயிர்செய்யப்பட்ட வயற் காணிகளின் அளவு ஒவ்வொரு வருடத்தின் அடிப்படையில் யாது என்பதையும்;

(iii) நீர்ப் பற்றாக்குறை காரணமாக பயிர்செய்ய முடியாதுபோன விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டதா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மேற்படி நிவாரணம் வழங்கப்பட்ட முறை யாது என்பதையும்;

(ii) மீண்டும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை ஆரம்பித்து விளைச்சல் கிடைக்கும் வரை இந்த நிவாரணத் திட்டம் அமுல்படுத்தப்படுமா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-06

கேட்டவர்

கௌரவ எஸ்.சீ. முதுகுமாரண, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-05-21

பதில் அளித்தார்

கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks