பார்க்க

02

E   |   සි   |  

 திகதி: 2010-11-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

0758/2010: Matale General Hosrpital

0758/ ’10 கெளரவ வசந்த அலுவிஹாரே,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) மாத்தளை பொது வைத்தியசாலையின் புதிய சத்திர சிகிச்சைத் தொகுதியின் வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டு, வைத்தியசாலை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதா என்பதையும், (ii) இப்புதிய சத்திர சிகிச்சைத் தொகுதியின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட திகதியும் பூர்த்தி செய்யப்பட்ட திகதியும் யாவையென்பதையும், (iii) மேற்படி சத்திர சிகிச்சைத் தொகுதியின் நிர்மாணப்பணிகள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பின், அதனைத் திறந்து வைத்தல் இதுவரையில் தாமதிக்கப்படுவதற்கான காரணங்கள் யாவையென்பதையும், (iv) இப்புதிய கட்டிடத்தினை விரைவில் திறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும், (v) அவ்வாறாயின், அது திறந்து வைக்கப்படும் திகதி யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஆ) இப்புதிய சத்திர சிகிச்சைத் தொகுதியினை நிர்மாணிப்பதற்காகவும் வளிச்சீராக்கி மற்றும் ஏனைய அடிப்படை உபகரணங்களைப் பொருத்துவதற்காகவும் செலவிடப்பட்ட பணத்தொகையினை வெவ்வேறாக அவா் இச்சபைக்கு சமர்ப்பிப்பாரா? (இ) இன்றேல், என்?

கேட்கப்பட்ட திகதி

2010-11-25

கேட்டவர்

கௌரவ வசந்த அலுவிஹாரே, பா.உ.

அமைச்சு

சுகாதர

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks