04

E   |   සි   |  

 திகதி: 2019-02-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0392/2019: பளுகஹவங்குவ மகா வித்தியாலயத்தில் அழிவடைந்துள்ள மஹிந்தோதய ஆய்வுகூடம்: புனரமைப்பு

392/ '18

கௌரவ சுசந்த புஞ்சிநிலமே.— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) திருகோணமலை மாவட்டத்துக்கு உரித்தான குறைந்தளவான வசதிகளைக் கொண்ட கஷ்டப் பிரதேசமான பதவி ஸ்ரீபுர பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள பாடசாலைகளில், மஹிந்தோதய ஆய்வுகூடமொன்று காணப்பட்ட ஒரேயொரு பாடசாலை திருகோணமலை / வடக்கு வலத்தியத்தின் பதவி பளுகஹவங்குவ மகா வித்தியாலயம் என்பதையும்;

(ii) மேற்படி கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த மஹிந்தோதய ஆய்வுகூம் 2014.11.08 ஆம் திகதி ஏற்பட்ட திடீர் தீப்பற்றலினால் அழிவடைந்துள்ளது என்பதையும்;

(iii) 2017.09.14 ஆம் திகதி கிழக்கு மாகாண கல்வி அமைச்சு இதன் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.54 இலட்சம் பணத்தொகையை ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) ஆய்வுகூடம் தீக்கிரையாகி தற்போது சுமார் 3 1/2 வருடங்கள் கடந்துள்ள போதிலும் நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியாமற் போனமைக்கான காரணங்கள் யாவை;

(ii) புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளபோதிலும், இதுவரையில் புனரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படாமைக்கான காரணம் யாது;

(iii) மேற்படி அ(iii) இல் குறிப்பிடப்பட்ட ஒதுக்கங்களுக்கு என்ன நடந்துள்ளது;

(iv) நவீனமயப்படுத்தல் பணிகள் ஆரம்பிக்கப்படும் திகதி யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-08

கேட்டவர்

கௌரவ சுசந்த புஞ்சிநிலமே, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-05-22

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks