01

E   |   සි   |  

 திகதி: 2019-02-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

0321/2019: Elephant repellent fence for Wijeyagama heroes village

321/ '18

கெளரவ இஷாக் ரஹுமான்,— சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2012 ஆம் ஆண்டு பலாகல பிரதேச செயலாளர் பிரிவில், பலாகல-நேகம்பஹ வீதியில் ஆரம்பிக்கப்பட்ட "விஜயகம" படைவீரர் கிராமம் 2013 ஆம் ஆண்டு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது என்பதையும்;

(ii) மேற்படி கிராமத்தில் காட்டு யானைகள் அடிக்கடி நடமாடுவதன் காரணமாக கிராமத்தில் வசிப்பவர்களின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வது கூட மிகவும் அபாயகரமான நிலையில் காணப்படுகின்றது என்பதையும்;

(iii) மேற்படி கிராமத்தைச் சுற்றி யானை வேலியொன்றை நிர்மாணிக்க பிரேரிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை அது மேற்கொள்ளப்படவில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) கிராமவாசிகளின் பாதுகாப்புக்காக துரிதமாக யானை வேலியொன்றை நிர்மாணிக்க நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;

(ii) ஆமெனில், அத்திகதி யாது என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-05

கேட்டவர்

கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

அமைச்சு

சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks