01

E   |   සි   |  

 திகதி: 2019-03-12   பதிலளிக்கப்பட்டவைகள் 

0077/2019: இலங்கையில் தேங்காய் உற்பத்தி: விபரம்

77/ '18

கெளரவ தயாசிறி ஜயசேகர,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2015 ஆம் ஆண்டு முதல் இன்று வரை இலங்கையில் அறிக்கையிடப்பட்டுள்ள தேங்காய் உற்பத்தி;

(ii) மேற்படி காலப்பகுதியில் வருடாந்தம் ஏற்றுமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணிக்கை;

(iii) மேற்படி காலப்பகுதியில் வருடாந்தம் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணிக்கை;

ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் வெவ்வேறாக யாது என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) கடந்த காலத்தில் சீரற்ற காலநிலை காரணமாக தென்னை விளைச்சல் குறைவடைந்தமை தொடர்பில் தீர்வு வழங்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை யாது என்பதையும்;

(ii) விவசாயிகளுக்கு நிவாரண உதவி அடிப்படையில் உரம் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(iii) ஆமெனில், வழங்கப்பட்ட உரத்தின் அளவு மற்றும் உரம் வழங்கப்பட்டுள்ள விவசாயிகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(iv) இதன் கீழ் உள்ளடங்கும் தென்னை ஏக்கர்களின் அளவு யாது என்பதையும்;

(v) இதுவரை, உர நிவாரணம் வழங்கப்படவில்லை எனின், அவை வழங்கப்படும் திகதி யாது என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-12

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

பெருந்தோட்டக் கைத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-03-12

பதில் அளித்தார்

கௌரவ வடிவேல் சுரேஷ், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks