பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
காண்க
அரசாங்க மற்றும் எதிர்க் கட்சி முதற்கோலாசான்களே உரையாற்றுவோரின் நிரல்களைத் தயாரிப்பதற்குப் பொறுப்பாக இருக்கின்றார்கள். இந்த நிரல்கள் முன்னதாகவே சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுச் சபாநாயகர் அந்த உறுப்பினர்களைச் சபையில் பேசும்படி அழைப்பார்.
சபை நடவடிக்கைகளில் ஒழுங்கு மீறப்பட்டதாக ஓர் உறுப்பினர் உணர்ந்தால், அவ்விடயத்தை அவர் அவ்வப்போது எழுப்ப முடியும். ஒழுங்குப் பிரச்சினை எழுப்பப்படும்போது சபையில் உரையாற்றிக் கொண்டிருப்பவர் அவருக்கு இடமளிக்க வேண்டும். சபாநாயகரோ தலைமைதாங்கும் உறுப்பினரோ தன் முடிவை அறிவித்த பின்னர் உறுப்பினர் தமது பேச்சை மீண்டும் ஆரம்பிக்கலாம்.
விவாதத்தின் இறுதியிலே உறுப்பினர்கள் தங்கள் சம்மதத்தை அல்லது எதிர்ப்பை "ஆம்" அல்லது "இல்லை" என்று சொல்வதன் மூலம் வெளிப்படுத்துகிறார்கள். ஓர் உறுப்பினர் வாய்மூலம் முடிவு தெரிவிப்பில் திருப்தி கொள்ளாது விடின் வாக்கெடுப்பைக் கோரலாம். வாக்கெடுப்பானது நிரை நிரையாக சார்பானவர்களையும் எதிரானவர்களையும் எண்ணுவதன் மூலமோ அல்லது அவர்களின் பெயர்களை அழைத்து அவர்களின் விருப்பைப் பதிவு செய்வதன் மூலமோ நடாத்தப்படலாம். எந்த வழியில் வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் எனத் தீர்மானிப்பது சபாநாயகரைப் பொறுத்தது.
கூட்ட நடப்பெண்ணானது தலைமைதாங்கும் உறுப்பினர் உட்பட இருபது உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும். கூட்ட நடப்பெண் காணப்படாத சமயத்தில், இந்த விடயம் தலைமைதாங்கும் உறுப்பினரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டால் அழைப்பு மணி ஒலிக்கச் செய்து, பின்பு ஐந்து நிமிடங்களின் முடிவிலும் கூட்ட நடப்பெண் காணப்படாத பட்சத்தில் அவர் பாராளுமன்றத்தை ஒத்தி வைப்பார்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks