பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-07-20
செய்தி வகைகள் : செய்திகள்
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் நிலவும் வெற்றிடங்கள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள வெற்றிடமொன்றையும் நிரப்புவதற்கு விதந்துரைப்பதற்காக ஆர்வம் உள்ள தனிநபர்களிடமிருந்து அரசியலமைப்புப் பேரவை விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள், இலங்கை பாராளுமன்றத்தின் இணையதளத்தில் “விரைவான அணுகல்” என்பதன் கீழ் ‘தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவிக்கான விதந்துரைத்தல்” என்ற பெயரில் கிடைக்கப்பெறும் விண்ணப்பப் படிவத்திற்கு அமைவாகத் தயாரிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2026 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி அன்றோ அல்லது அதற்கு முன்னரோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
குறித்த விண்ணப்பங்கள் அரசியலமைப்புப் பேரவையின் பதில் செயலாளர் நாயகம், அரசியலமைப்புப் பேரவை – அலுவலகம், இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே என்ற முகவரிக்கு அல்லது constitutionalcouncil@parliament.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும்.
கடித உறையின் இடதுபுற மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடயமாக ‘தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்காக விதந்துரைத்தல்’ எனக் குறிப்பிடுமாறு கோரப்படுகிறது.
2026-07-21
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய சூழல் (திருத்த) சட்டமூலத்தை கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இன்று (ஜுலை 21) சான்றுரைப்படுத்தினார்.1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சூழல் சட்டம், அத்துடன் 1988 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க மற்றும் 2000 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க தேசிய சூழல் (திருத்த) சட்டங்கள் மூலம் சுற்றுச் சூழல் பாதுகாப்பு கணிசமாக வலுப்படுத்தப்பட்டிருந்த போதிலும், தற்போதைய சுற்றாடல் மற்றும் நிறுவன ரீதியான சவால்களை எதிர்கொள்வதற்கு நடைமுறையிலுள்ள சட்டக் கட்டமைப்பு போதுமானதாக இல்லை என்பதைக் கருத்திற்கொண்டு இந்தத் திருத்தச் சட்ட மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்தச் சட்டத்தின் மூலம் சுற்றுச் சூழலைப் பாதுகாத்தல், முகாமைத்துவம் செய்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றிற்குத் தேவையான சட்டக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துதல், கழிவுகளை அகற்றுவது தொடர்பான ஒழுங்குமுறை பொறிமுறைகளை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்குப் பயன்படுத்தப்படும் பொறிமுறைகளை நவீனமயப்படுத்துதல் ஆகியவை நோக்கமாகக் கொள்ளப்பட்டுள்ளன.இதற்கமைய இச்சட்டமூலம் சட்டமூலம் 2026 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க தேசிய சூழல் (திருத்தச்) சட்டமாக அமுலுக்கு வருகிறது.
2026-07-20
இலங்கைப் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களின் கோரிக்கைக்கு அமைய இந்திய அரசாங்கம் மற்றும் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் இலங்கைப் பாராளுமன்ற அதிகாரிகளுக்காக 2026ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆளுமை விருத்தி நிகழ்ச்சித்திட்டம் புதுடில்லியில் உள்ள இந்தியப் பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.இலங்கைத் தூதுக் குழுவிற்கு பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன தலைமைதாங்கினார்.இந்திய பாராளுமன்றத்தின் நிறுவனக் கட்டமைப்பு, அதன் நிர்வாகச் செயன்முறைகள் மற்றும் பாராளுமன்ற செயலகத்தின் பணிகள் தொடர்பில் இலங்கைத் தூதுக் குழுவினர் விரிவான அறிவைப் பெற்றுக் கொண்டனர். அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் உறுப்பினர் சேவைகள் மற்றும் நலன்புரிச் சேவைகள் உள்ளிட்ட சேவைகள் தொடர்பிலும் இக்குழுவினருக்கு சிறந்த அனுபவப் பகிர்வு கிடைக்கப்பெற்றது.இந்த நிகழ்ச்சியின் போது பாராளுமன்றக் குழுக்களின் பங்கு, குழுச் செயலகங்களின் செயற்பாடுகள் மற்றும் முகாமைத்துவம், சர்வதேச பாராளுமன்ற உறவுகள் மற்றும் நெறிமுறைகள், இந்திய பாராளுமன்றத்தின் துறைசார் நிரந்தரக் குழு முறைமை, தலைமை தாங்கும் அதிகாரிகளின் வகிபாகம் மற்றும் அதிகாரங்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் அதிகாரங்கள் மற்றும் பணிகள், அத்துடன் பாராளுமன்ற செயலகத்தின் வரவு–செலவுத் திட்டத்தைத் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டன.அத்துடன், இலங்கைப் பாராளுமன்றத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர், இந்தியப் பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ தொலைக்காட்சி அலைவரிசையான ‘சன்ஸத் தொலைக்காட்சியின்’ தயாரிப்பு செயன்முறைகள் தொடர்பில் நடைமுறை அனுபவத்தைப் பெற்றுக்கொண்டனர். இதன்போது, லோக் சபா மற்றும் ராஜ்ய சபா ஆகிய இரு சபைகளின் பாராளுமன்ற நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் அவர்கள் நேரடி அனுபவத்தைப் பெற்றனர்.இலங்கைத் தூதுக் குழுவினர் பாராளுமன்ற நூலகக் கட்டடம், லோக் சபா மற்றும் ராஜ்ஜ சபாவின் சபாமண்டபங்கள் மற்றும் பாராளுமன்ற வளாகத்தின் முக்கியவாய்ந்த இடங்களையும் நேரடியாகப் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியானது இலங்கை மற்றும் இந்திய பாராளுமன்றங்களுக்கு இடையிலான நிறுவன ரீதியான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் முயற்சியின் ஓர் அங்கமாக அமைந்தது.
2026-07-20
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விதந்துரைக்கப்படுவதற்கு ஆர்வம் உள்ள தனிநபர்களிடமிருந்து அரசியலமைப்புப் பேரவை விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள், இலங்கை பாராளுமன்றத்தின் இணையதளத்தில் “விரைவான அணுகல்” என்பதன் கீழ் ‘இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான விதந்துரைத்தல்” என்ற பெயரில் கிடைக்கப்பெறும் விண்ணப்பப் படிவத்திற்கு அமைவாகத் தயாரிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2026 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி அன்றோ அல்லது அதற்கு முன்னரோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்.குறித்த விண்ணப்பங்கள் அரசியலமைப்புப் பேரவையின் பதில் செயலாளர் நாயகம், அரசியலமைப்புப் பேரவை – அலுவலகம், இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே என்ற முகவரிக்கு அல்லது constitutionalcouncil@parliament.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும்.கடித உறையின் இடதுபுற மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடயமாக ‘இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான விதந்துரைத்தல்’ எனக் குறிப்பிடுமாறு கோரப்படுகிறது.
2026-07-16
நியாயமான அடிப்படை இன்றி தன்னிச்சையாக பொருட்களின் விலையை நிர்ணயித்து நுகர்வோரை பாதிக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கில், நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை நாடு முழுவதும் 272 விசாரணை அதிகாரிகளை நியமித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விசாரணை அதிகாரிகள் மாவட்ட செயலகங்களுடன் இணைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்களின் மேற்பார்வையின் கீழ் தங்களது அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். நுகர்வோரை அநியாயத்திற்கு உள்ளாக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தொடர்ச்சியாக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ருவன் திலக ஜயகொடி வாய்மூல விடைக்காக எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த கௌரவ வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர். எம். ஜயவர்தன இந்தத் தகவலைத் தெரிவித்தார்.நியாயமற்ற விலைகளில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை கட்டுப்படுத்துவதற்கான விரிவான செயல்முறை நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையிடம் உள்ளது. அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைக்கு உட்பட்ட சில அத்தியாவசியப் பொருட்கள் உள்ளன. அவற்றை நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி விற்பனை செய்வது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இதுவரை இத்தகைய மீறல்களுக்கு எதிராக கணிசமான அளவு அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும், நுகர்வோரின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தினசரி சந்தை ஆய்வுகளையும், பண்டிகைக் காலங்களில் நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்புகளையும் மேற்கொண்டு வருகிறது. இதனுடன், கட்டுப்பாட்டு விலைக்கு உட்பட்ட பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றனவா என்பதை கண்காணிக்கும் விசேட மேற்பார்வைத் திட்டமும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks