2025-12-05
செய்தி வகைகள் : செய்திகள்
2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) பாராளுமன்றத்தில் இன்று (டிச. 05) மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப. 07.30 மணிக்கு ஆரம்பமானதுடன், இதற்கு ஆதரவாக 158 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டது. அத்துடன், இருவர் வாக்களிப்பிலிருந்து விலகியிருந்தனர். அதற்கமைய, 2026 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 157 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
2026 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது 'வரவுசெலவுத்திட்ட உரை' நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் கடந்த நவம்பர் 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 08ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை 06 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இடம்பெற்றது. அதற்கமைய, ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு நவம்பர் 14 ஆம் திகதி 118 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் நவம்பர் 15 ஆம் திகதி முதல் இன்று (05) வரை ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான குழு நிலை விவாதம் 14 நாட்கள் இடம்பெற்றன. 2026 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான குழுநிலை விவாதம் 17 நாட்கள் இடம்பெறவிருந்ததுடன், சீரற்ற காலநிலையினால் நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக விவாத நாட்கள் இவ்வாறு 14 நாட்களாகக் குறைக்கப்பட்டன.
அந்த நிலையில், கடந்த சில நாட்களில் குழுநிலையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த ஒரு சில அமைச்சுக்களுக்கான செலவுத்தலைப்புகள் மீது முன்னர் திட்டமிடப்பட்ட தினங்களில் விவாதம் மேற்கொள்ள முடியாமல் போனதால், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு மேலதிகமாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு என்பவற்றின் செலவுத்தலைப்புகளும் 2025.12.03 ஆம் திகதியும் இன்றும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.
மேலும், பாராளுமன்றத்தில் இன்று (05) நிறைவேற்றப்பட்ட 2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் அரசியலமைப்பின் 79 வது உறுப்புரைக்கு அமைய கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். இதற்கமைய, ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2025ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டமாக அமுலுக்கு வருகின்றது.
அதற்கு மேலதிகமாக, சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலம், பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் மற்றும் செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் (திருத்தச்) சட்டமூலம் ஆகிய மூன்று சட்டமூலங்கள் இன்று பாராளுமன்றத்தில் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டன. அத்துடன், பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் மற்றும் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் என்பவற்றுக்கும் பாராளுமன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக, மூன்று குறைநிரப்புத் தொகைகளும் பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டன.
2026-02-26
நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு விவாதம் மார்ச் 04ஆம் திகதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஒத்திவைப்பு விவாதம் மார்ச் 05ஆம் திகதிபாராளுமன்றம் மார்ச் 03ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை கூடவுள்ளது. கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கு அமைய 2026 மார்ச் 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.இதன் பின்னர் மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை அந்நியச் செலாவணிச் சட்டத்தின் கீழ் 2467/67ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.2026 மார்ச் 04ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணிவரை பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காகவும், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.அன்றையதினம் மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணிவரை ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.2026 மார்ச் 05ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை மார்ச் 08ஆம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சபை ஒத்திவைப்பு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.2026 மார்ச் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.அதனையடுத்து, மு.ப. 11.30 முதல் பி.ப. 5.00 மணிவரை தனியார் உறுப்பினர் பிரேரணைகள் தொடர்பான விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கீழ்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.கௌரவ பாராளுமன்ற உறுப்பினரின் பெயர்தனியார் உறுப்பினர் பிரேரணைகௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சிதேசிய விளையாட்டு அணியொன்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அல்லது தேசிய மட்ட சாதனையைப் படைத்துள்ள விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு விளையாட்டுத்துறைக்குரிய ஏதேனும் பட்டப் பாடநெறியைப் பயில்வதற்கு வாய்ப்பினை வழங்குதல்.கௌரவ சமிந்த விஜேசிறிவாழ்க்கைத்தொழில்சார் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம் தொடர்பில் பாடசாலை மாணவர்களை விழிப்பூட்டுவதற்கான நிகழ்ச்சித் திட்டமொன்றைத் தயாரித்தல்.கௌரவ ரவி கருணாநாயக்கபுலம்பெயர்ந்த ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை களுக்குத் தீர்வு காணச் சட்ட அதிகாரங்களுடன் அலகு ஒன்றைத் தாபித்தல்.கௌரவ லால் பிரேமநாத்அடிமட்டத்தில் செயற்படும் நாட்டிலுள்ள சகல உள்ளூராட்சி அதிகாரசபைகள் தொடர்பிலும் மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை தணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல்.கௌரவ ரோஹண பண்டாரபேராசிரியர் பதவிகள் மற்றும் கலாநிதி பட்டங்களை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கான வேலைத்திட்டமொன்றை தயாரித்தல்.கௌரவ நலின் பண்டார ஜயமஹபெற்றோலியம், எரிபொருள் மற்றும் நீர் ஆகியவற்றுடன் தொடர்புடைய கைத்தொழில்களை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டு வருதல்.கௌரவ ரவீந்திர பண்டாரபைனஸ் செய்கையால் நீர் மூலங்கள் மற்றும் சூழலுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களைத் தடுப்பதற்கான முறையியலொன்றைத் தயாரித்தல்.இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை அரசாங்கத் தரப்பினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
2026-02-25
இலங்கை பிரதி சபாநாயகருடனும் இரு தரப்புக் கலந்துரையாடல்பாராளுமன்றக் குழுக்களுடன் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் மாற்றம் குறித்துக் கலந்துரையாடல்இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஹங்கேரியின் தேசிய சட்டமன்றத்தின் கௌரவ பிரதி சபாநாயகர் (கலாநிதி) லாஜோஸ் ஓலா (Dr. Lajos Oláh) அவர்கள் இலங்கை சபாநாயகர் கௌரவ (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை 23.02.2026ஆம் திகதி பாராளுமன்றத்தில் சந்தித்தார்.ஹங்கேரி பிரதி சபாநாயகரை வரவேற்ற இலங்கை சபாநாயகர், இலங்கைக்கும் ஹங்கேரிக்கும் இடையில் காணப்படும் நீண்டகால இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் இரு நாட்டு மக்களுக்கும் இடையில் காணப்படும் வலுவான உறவுகளையும் நினைவுகூர்ந்தார். குறிப்பாக இந்நாட்டின் வீதி அபிவிருத்தி மற்றும் நீர் சுத்திகரிப்புத் திட்டங்கள், GSP சலுகை உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாடுகள் மற்றும் ஏனைய சர்வதேச மட்டங்களில் ஹங்கேரி வழங்கிவரும் ஒத்துழைப்புக்களுக்கு சபாநாயகர் நன்றி தெரிவித்தார்.ஊழல் மற்றும் வறுமையை ஒழிப்பதற்கு புதிய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டிய சபாநாயகர், முதலீட்டு வாய்ப்புக்களை விஸ்தரிக்க எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் பற்றியும் வலியுறுத்தினார். அத்துடன், இலங்கையில் காணப்படும் முதலீடுகள் மற்றும் வர்த்தக வாய்ப்புக்களை ஆராய்வதற்கு ஹங்கேரி முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் அழைப்புவிடுத்தார். சுற்றுலாத் துறையை மேம்படுத்த அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளை எடுத்துரைத்த சபாநாயகர், கடந்த கால அரசாங்கங்களுடன் ஒப்பிடுகையில் ஹங்கேரியிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்தார். இவ்வாறான பின்னணியில் இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறையை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் உறுதிப்படுத்த பத்தாவது பாராளுமன்றத்தில் இலங்கை – ஹங்கேரி பாராளுமன்ற நட்புறவு சங்கத்தை அமைப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் சபாநாயகர் இங்கு மேலும் தெரிவித்தார்.இங்கு கருத்துத் தெரிவித்த ஹங்கேரியின் கௌரவ பிரதி சபாநாயகர், இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்பை வலியுறுத்தினார். இலங்கையின் சுற்றுச்சூழல், இயற்கை அழகு, வளமான கலாச்சாரம் மற்றும் அன்பான விருந்தோம்பல் ஆகியவற்றையும் அவர் பாராட்டினார்.திறந்த பாராளுமன்ற முறைமையை மேம்படுத்தல், பொதுமக்களுடனான இணைப்பை வலுப்படுத்தல் மற்றும் அனுபவங்கள், நல்ல நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்ளல் மற்றும் பாராளுமன்றங்களின் ஆய்வுக்கான திறன்ங்களை மேம்படுத்துவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் “INTER PARES” உலகளாவிய திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க ஹங்கேரி எதிர்பார்ப்பதாகவும் கௌரவ பிரதி சபாநாயகர் (கலாநிதி) லாஜோஸ் ஓலா குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையே சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதன் முக்கியத்துவம், இலங்கைக்கும் ஹங்கேரிக்கும் இடையே நேரடி விமானங்களை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையிலான கண்காட்சிகளை ஏற்பாடு செய்வதற்கான வாய்ப்புக்கள் போன்ற விடயங்களையும் அவர் இங்கு வலியுறுத்தினார்.ஹங்கேரிக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறும் அவர் இலங்கை சபாநாயகருக்கு அழைப்பு விடுத்தார்.இந்த விஜயத்தின் போது ஹங்கேரியின் கௌரவ பிரதி சபாநாயகர், இலங்கை பாராளுமன்றத்தின் கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார். சுமுகமாக இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், செயற்கை நுண்ணறிவில் (AI) வளர்ந்து வரும் உலகளாவிய போக்குகள் மற்றும் சவால்கள், இரு நாடுகளிலும் உள்ள அரசியல் கட்டமைப்புக்கள், மாணவர் பாராளுமன்றம் போன்ற மக்களுடனான இணைப்புக்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் சுற்றுலாத்துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டன.இதேநேரம், ஹங்கேரி தூதுக் குழுவினருக்கும், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஆகியவற்றின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் இடம்பெற்றது. செயற்கை நுண்ணறிவுத் துறையில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் பணியாற்றுவது குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது.இந்தக் கூட்டத்தில், அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவரும், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சருமான (பேராசிரியர்) கிரிஷாந்த அபேசேன, விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவருமான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜனக சேனாரத்ன மற்றும் இரு குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும், வளர்ந்து வரும் உலகளாவிய சவால்களை திறம்பட எதிர்கொள்வது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது. செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டை உறுதி செய்வதற்காக வலுவான ஒழுங்குமுறை கட்டமைப்புகள், நெறிமுறை தரநிலைகள் மற்றும் நிர்வாக வழிமுறைகளை நிறுவுவதன் முக்கியத்துவமும் இங்கு வலியுறுத்தப்பட்டன. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் திறன் பரிமாற்றத்தை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு தொடர்பில் பாராளுமன்ற உபகுழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என ஹங்கேரியின் கௌரவ பிரதி சபாநாயகர் (கலாநிதி) லாஜோஸ் ஓலா முன்மொழிந்தார்.செயற்கை நுண்ணறிவு தொடர்பான உலகளாவிய சவால்களுக்கு பதிலளிப்பதில் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இந்தக் கலந்துரையாடல் வலியுறுத்தியது. மேலும், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நிலையான தொழில்நுட்ப முன்னேற்றத்தை உறுதி செய்யும் அதே வேளையில், புதுமைகளை ஊக்குவிப்பதற்கான ஹங்கேரி மற்றும் இலங்கை இடையேயான பரஸ்பர உறுதிப்பாடும் இங்கு வலியுறுத்தப்பட்டன.இதில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, ஹங்கேரிக்கான கென்சியூலர் ஷெவந்த ஹரேந்திர சுதாரக மென்டிஸ் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.இலங்கை பாராளுமன்றத்தின் வரலாறு மற்றும் மரபுகள் குறித்து அறிந்துகொள்ளும் நோக்கில் ஹங்கேரி தேசிய சட்டமன்றத்தின் கௌரவ பிரதி சபாநாயகர் இலங்கை பாராளுமன்றத்தில் சுற்றுப் பயணத்தையும் மேற்கொண்டார்.
2026-02-20
மாகாண சபைத் தேர்தல்கள் எந்த தோ்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கௌரவ சபாநாயகரினால் அறிவிக்கப்பட்டது• "இலங்கை நிலையான சொத்து உயர்தொழிலர்கள் நிறுவகம்” எனும் சட்டமூலத்திற்கு கௌரவ சபாநாயகரின் சான்றுரை மாகாண சபைத் தேர்தல்கள் எந்த தோ்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் கடமையாற்றுவதற்காக நியமிக்கப்பட்ட கௌரவ உறுப்பினர்களின் பெயர்களை கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இன்று (பெப். 20) பாராளுமன்றத்தில் அறிவித்தார். அதற்கமைய, கௌரவ விஜித ஹேரத் அவர்களின் தலைமையிலான இந்த விசேட குழுவின் ஏனைய உறுப்பினர்களாக முனீர் முலாபர், (சட்டத்தரணி) சுனில் வடகல, அருண் ஹேமச்சந்திரா, ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், லக்ஸ்மன் நிபுண ஆரச்சி, சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், சமன்மலீ குணசிங்ஹ, தர்மப்ரிய விஜேசிங்ஹ, சந்தன சூரியஆரச்சி, (சனாதிபதி சட்டத்தரணி) எம். நிசாம் காரியப்பர் ஆகியோர் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளதாக கௌரவ சபாநாயகர் அறிவித்தார். அத்துடன், இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம், 2026 பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி "இலங்கை நிலையான சொத்து உயர்தொழிலர்கள் நிறுவகம்” எனும் பெயரிலான சட்டமூலத்தில் சான்றுரை எழுதப்பட்டதாக கௌரவ சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார். 2025 டிசம்பர் 05 ஆம் திகதி கௌரவ போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் முதலாவது மதிப்பீட்டுக்காக இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், 2026 பெப்ரவரி 05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமூலம் ஊடாக நிறுவகத்தின் அங்கத்தவராளின் தொழில் தரம் மற்றும் ஒழுக்கத்தை பேணுவது தொடர்பில் பொறுப்புக்கூறவேண்டிய இலங்கை நிலையான சொத்து உயர்தொழிலர்கள் நிறுவகத்தை நிறுவுவதற்கும், நிலையான சொத்து உயர்தொழில் தொடர்பான பொதுமக்களின் அக்கறையை பாதுகாத்து ஊக்குவிப்பதற்கும், மற்றும் அதனோடு தொடர்புபட்ட விடயங்களுக்கு ஏற்பாடு செய்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, "இலங்கை நிலையான சொத்து உயர்தொழிலர்கள் நிறுவகம்” எனும் சட்டமூலம், 2026 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க இலங்கை நிலையான சொத்து உயர்தொழிலர்கள் நிறுவக சட்டமாக நடைமுறைக்கு வருகின்றது.
2026-02-19
இரு சட்டமூலங்களை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்கொள்கல நிலையத் தொழிற்படுத்துநர்களுக்கு உரிமமளித்தல் சட்டமூலம் மற்றும் கப்பற்றொழில் முகவர்களுக்கு, சரக்கு அனுப்புநர்க்கு, கலன் செயற்படுத்தத்தப்படாப் பொதுக் காவுநர்க்கு மற்றும் கொள்கலம் செயற்படுத்துநர்க்கு உரிமமளித்தல் (திருத்தம்) சட்டமூலம் ஆகியவற்றை 17.02.2026ஆம் திகதி சான்றுரைப் படுத்தியிருப்பதாக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன நேற்று (பெப். 18) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.1972ஆம் ஆண்டின் 10ஆம் இலக்க கப்பற்றொழில் முகவர்களுக்கு, சரக்கு அனுபுநர்களுக்கு, கலன் செயற்படுத்ததப்படாப் பொதுக் காவுனர்க்கு மற்றும் கொள்கலம் செயற்படுத்துநர்களுக்கு உரிமைமளித்தல் சட்டம் இதன்மூலம் திருத்தப்படுகின்றது.இதற்கு அமைய, இதுவரை விசேட துறையாகக் கருதப்படும் கொள்கலம் செயற்படுத்துநர்கள் அச்சட்டவாக்கத்தின் ஏற்பாாடுகளின் ஏற்புடமையிலிருந்து நீக்கப்பட்டு, கொள்கல நிலையத் தொழிற்படுத்துநர்களுக்கு உரிமமளித்தல் சட்டமூலத்தின் கீழ் உள்ளடக்கப்படுவர். எஞ்சிய கப்பல் சேவை வழங்குனர்கள் திருத்தச் சட்டத்தின் கீழ் ஒழுங்குறுத்தப்படுவர்.கொள்கலன் செயற்படுத்துனர்களினதும் தற்போதைய உரிமங்களும், பரிசீலிக்கப்படும் விண்ணப்பங்களும் தானாகவே புதிய கட்டமைப்பின் கீழ் கொண்டுவரப்படுவதுடன், இத்துறையின் செயற்பாடுகள் மற்றும் வணிக நடவடிக்கைகளின் தொடர்ச்சி உறுதிசெய்யப்படும்.இதற்கு அமைய 2026ஆம் ஆண்டு பெப்ரவரி 05ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டமூலம் 2026ஆம் ஆண்டின் 04ஆம் இலக்க கப்பற்றொழில் முகவர்களுக்கு, சரக்கு அனுப்புநர்க்கு, கலன் செயற்படுத்தத்தப்படாப் பொதுக் காவுநர்க்கு மற்றும் கொள்கலம் செயற்படுத்துநர்க்கு உரிமமளித்தல் (திருத்தம்) சட்டமாக நடைமுறைக்கு வருகின்றது. அத்துடன், 05.02.2026 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட கொள்கல நிலையத் தொழிற்படுத்துநர்களுக்கு உரிமமளித்தல் சட்டமூலம், இலங்கையில் கொள்கலன் தொழிற்படுத்துநர்களின் வணிகங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் கட்டுப்படுத்தப்படுவதற்கான ஏற்பாடுகளை வழங்குகின்றது. அவ்வாறான வணிகளில் ஈடுபடும் எந்தவொரு நபரும் வணிக கப்பல் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்படும் செல்லுபடியாகும் உரிமைப்பத்திரத்தை வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்கின்றது.இது 2026ஆம் ஆண்டின் 03ஆம் இலக்க கொள்கல நிலையத் தொழிற்படுத்துநர்களுக்கு உரிமமளித்தல் சட்டமாக நடைமுறைக்கு வருகின்றது.பாராளுமன்ற விசேட குழுவிற்கு (கலாநிதி) உபாலி பன்னிலகே நியமனம்கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்த அதன் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்காகவுமான பாராளுமன்ற விசேட குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அனுர கருணாதிலக விலகியமையால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் பாராளுமன்றத்தின் 109ஆவது நிலையியற் கட்டளைக்கு அமைய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) உபாலி பன்னிலகே அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் சபையில் அறிவித்தார்.