பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2024-07-12
செய்தி வகைகள் : குழு செய்திகள்
2023 இற்கான முழுமையான வரி நிலுவையான 1.1 பில்லியன் ரூபாய் நிதியை 2024.06.30 ஆம் திகதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட மது உற்பத்தியாளர்களிடமிருந்து அறவிடுமாறு 2024.04.24 ஆம் திகதி வழிவகைகள் பற்றிய குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரையின் முன்னேற்றம் தொடர்பில் பரிசீலிக்கும் போது குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைக்கு அமைய, அது தொடர்பில் போதுமான நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்து குழு அதன் கடுமையான அதிருப்தியை வெளியிட்டது.
இங்கு மதுவரித் திணைக்களம் குறிப்பிடுகையில், வழிவகைகள் பற்றிய குழு வழங்கிய பரிந்துரை மற்றும் முன்னைய ஆண்டுகளின் மது வரி அறவிடுதல் தொடர்பான ஒப்பந்தங்கள் என்பவற்றுக்கிடையிலான முரண்கள் மற்றும் அது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி 2024.05.02 ஆம் திகதி கடிதம் மூலம் நிதி அமைச்சிடம் வினவியிருந்தாலும் நிதி அமைச்சு தரப்பிலிருந்து பதிலொன்று கிடைக்கவில்லை எனத் தெரிவித்தது.
பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் 2024.07.10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.
இங்கு, டபிள்யு.எம். மெண்டிஸ் நிறுவனம் 1,659 மில்லியன் ரூபாய், ஹிங்குரான டிஸ்டிலரீஸ் நிறுவனம் 102 மில்லியன் ரூபாய், சினர்ஜி நிறுவனம் 37 மில்லியன் ரூபாய், வயம்ப டிஸ்டிலரீஸ் 79 மில்லியன் ரூபாய் என்றவகையில் 2023 ஆம் ஆண்டு முதல் 2024.06.15 ஆம் திகதி வரையான நிலுவை வரி மற்றும் வருமானம் 1.8 பில்லியன் ரூபாய் என குழுவில் புலப்பட்டதுடன், இவ்வாறு நிலுவை வரியை முழுமையாக அறவிடுமாறு குழுவினால் பரிந்துரை வழங்கப்பட்டிருந்த நிலையில், மதுவரித் திணைக்களத்தினால் அதன் கடமையை புறக்கணித்துள்ளமை தொடர்பில் பாராளுமன்றத்துக்கும் பொதுமக்களுக்கும் தெரியப்படுத்துவதாக குழுவினால் வலியுறுத்தப்பட்டது.
மேலும், டபிள்யு.எம். மெண்டிஸ் நிறுவனம் தவிர்ந்த ஏனைய நிறுவங்களுடன் மதுவரித் திணைக்களம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தங்கள் தற்பொழுது செயலற்ற நிலையில் உள்ளதாகவும் இங்கு புலப்பட்டது. இது தொடர்பில் முறையான நடவடிக்கை எடுப்பதற்கு மது வரி ஆணையாளர் நாயகத்துக்கு முடியாமல் போயுள்ளதாகவும், அவ்வாறு உள்ள நிலையில் ஆணையாளர் நாயகம் வழிவகைகள் பற்றிய குழுவை புறக்கணித்து வருவதாகவும், மதுவரித் திணைக்களம் குழுவின் பரிந்துரைகளை பொருட்படுத்தாமல் இருப்பதாகவும், அது பாராளுமன்றத்தையும் குழுவையும் அகௌரவிப்பதாகும் என குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
2023 இற்கான நிலுவை மது வரியை செலுத்தாத நிறுவனங்களின் மது உற்பத்தியை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மீண்டும் நிதி அமைச்சுக்கு எழுத்து மூலம் அறிவிக்குமாறு குழுவின் செயலாளருக்கு குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.
பொதுமக்களுக்கு வரி விதிக்கும் பின்னணியில், நிலுவை வரிகளை செலுத்தாத மது உற்பத்தியாளர்கள் தொடர்பில் மதுவரித் திணைக்களம் தளர்வான கொள்கையை பின்பற்றுவது தொடர்பிலும் குழு அதன் அதிருப்தியை வெளியிட்டது. அத்துடன், நான்கு குழுக் கூட்டங்களில் குழுவினால் நிதி அமைச்சுக்கு வழங்கப்பட்ட பரிந்துரைகளை செயற்படுத்தாமை தொடர்பிலும் குழுவின் கடுமையான அதிருப்தி வெளியிடப்பட்டது.
அத்துடன், அவசர அனர்த்த சூழ்நிலையில் தலையிடுவதன் கீழ், கண்டி புகையிரத நிலையம் வெள்ளத்தினால் மூழ்கிய விடயம் தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. இங்கு, கண்டி புகையிரத நிலையம் உள்ளடங்கிய வடிகான் கட்டமைப்பு போதுமானதாக இல்லை எனவும், அவற்றின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் என்பன விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். இது தொடர்பில் உலக வங்கியின் கவனத்தை ஈர்ப்பதற்கும், மாவட்ட அபிவிருத்திக் குழுவுக்கு இந்தப் பிரேரணையை முன்வைக்குமாறும், அதற்கு புகையிரத திணைக்களத்தையும் சம்பந்தப்படுத்திக்கொள்ளுமாறும் குழுவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
அவிசாவளை பிரதேசத்தில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் சேற்று நீர் கலந்த நீர் விநியோகிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள மனு தொடர்பிலும் இதன்போது மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிக்கலுக்குக் காரணமாக உள்ள அனுமதி வழங்கப்பட்ட மற்றும் அனுமதி வழங்கப்படாத இரத்தினக்கல் அகழ்வு தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையுடன் இணைந்து சிக்கலுக்குக் காரணமான கெடஹெத்த கால்வாயுடன் தொடர்புடைய இரத்தினக்கல் அகழ்வுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள பட்டியலை பெற்றுக்கொள்ளுமாறும், அது தொடர்பில் கண்காணிப்பு செய்து அதன் அறிக்கையை வழிவகைகள் பற்றிய குழுவுக்கு வழங்குமாறும் குழுவின் தலைவர் கலந்துகொண்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்தக் கூட்டதில் வழிவகைகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களான கௌரவ டபிள்யு. டி. ஜே. செனவிரத்ன, கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ உதயன கிரிந்திகொட மற்றும் கௌரவ வசந்த யாப்பா பண்டார ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
2026-06-19
களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-18
வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.
2026-06-17
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-17
புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks

