பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2023-07-19
செய்தி வகைகள் : குழு செய்திகள்
நிர்மாணப் பணிகள் கைவிடப்பட்டுள்ள கொழும்பு க்ரிஷ் கட்டடம் மற்றும் அதனை அண்மித்த பகுதியில் பொதுமக்களுக்கு ஆபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை விரைவாக மேற்கொள்ளுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க, அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதன் பொறுப்பு அமைச்சு மற்றும் அரசாங்கத்துக்குக் காணப்படுவதால் இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழு அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே அமைச்சர் இந்த ஆலோசனையை வழங்கினார். இதன்போது இராஜாங்க அமைச்சர்களான கௌரவ தேனுக விதானகமகே மற்றும் கௌரவ அருந்திக்க பர்னாந்து ஆகியோரும் கலந்துகொண்டனர்.
க்ரிஷ் கட்டட நிர்மாணத் தளத்தில் பொருத்தப்பட்டுள்ள நிர்மாண உபகரணங்கள் காற்றுக்கு விழக்கூடிய அபாயம் உள்ளதாகவும், நீர் தேங்கி நிற்பதால் நுளம்பு பெருகக்கூடிய நிலைமை உருவெடுத்துள்ளதாவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. விசேடமாக, இந்தக் கட்டடத்தின் மூன்று மாடிகள் பூமியின் மட்டத்திலிருந்து கீழே காணப்படுவதால், அதில் மழை நீர் தேங்கி நின்று டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, அதனை அண்மித்திருக்கும் பிரதான சுற்றுலா ஹோட்டல்களிலிருந்து முறைப்பாடுகள் வந்திருப்பதாகவும் அதிகாரில் இதன்போது தெரிவித்தனர்.
அதற்கமைய, இந்த முதலீட்டாளருடன் கலந்துரையாடி குறிப்பிட்ட காலக்கெடுவொன்றுக்குகள் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தவறும் படச்சத்தில் தேவையான சட்ட ரீதியான நடவடிக்கைகளை விரைவாக எடுக்குமாறும் அமைச்சர் அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார். நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் முதலீட்டாளருடன் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
அதற்கு மேலதிகமாக, உள்ளூராட்சி நிறுவனத்தை தொடர்புபடுத்தாமல் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டு கம்பஹா சங்கபோதி கல்லூரிக்கு முன்னால் நிர்மாணிக்கப்பட்ட வீடமைப்புத்திட்டம் இடையில் கைவிடப்பட்டுள்ளமை தொடர்பில் குழுவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த வீடுகளுக்கு பாதை வசதிகள், நீர் வழங்கல், கழிவு முகாமைத்துவம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளும் முறையாக வழங்கப்படவில்லை என இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
விசேட வேலைத்திட்டமாக அனுமதி வழங்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் உரிய தரங்களுக்கு அமைய மேற்கொள்ளப்படவில்லை என்பதால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இந்தத் திட்டம் தொடர்பில் கடந்த மார்ச் மாதத்தில் இடம்பெற்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலும் கலந்துரையாடப்பட்யிருந்தாலும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமை தொடர்பில் அமைச்சர் அதிருப்தியை வெளியிட்டார். அதற்கமைய, இது தொரப்பில் விரைவாக நடவடிக்கை எடுத்து இரண்டு வாரங்களில் குழுவுக்கு அறிக்கை வழங்குமாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ கோகிலா குணவர்தன, கௌரவ மிலான் ஜயதிலக்க மற்றும் கௌரவ மதுர விதானகே ஆகியோரும் இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2026-06-19
களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-18
வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.
2026-06-17
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-17
புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks


