logo

E   |   සි   |  

2020-01-22

செய்தி வகைகள் : செய்திகள் 

மத்திய வங்கி திறைசேரிமுறி தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கையை சபையில் சமர்ப்பிக்க சபாநாயகர் தீர்மானம்

இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்படும் திறைசேரிமுறி தொடர்பில் விசாரித்து அறிக்கையிடுவதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வின் அறிக்கையை பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலரும் அறிந்து கொள்ளும் நோக்கில் சபையில் சமர்ப்பிக்க கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய தீர்மானித்திருப்பதாக இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

இந்த அறிக்கையை சபையில் சமர்ப்பிப்பதன் ஊடாக திறைசேரிமுறி விநியோகம் தொடர்பில் தற்பொழுது இடம்பெற்றுவரும் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாது என தான் நம்புவதாகவும் சபாநாயகர் சபையில் தெரிவித்தார்.

 

தடயவியல் கணக்காய்வு அறிக்கை சில நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றத்துக்குப் பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்ததுடன், சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கு அமைய குறித்த அறிக்கையை பகிரங்கப்படுத்தாதிருக்க சபாநாயகர் முன்னர் தீர்மானித்திருந்தார்.

 

இந்த தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கைவிடுத்திருப்பதுடன், எதிர்வரும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடி விவாதத்துக்கான திகதியைப் பெற்றுத் தருவதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

 

சபாநாயகரின் உரையின் முழு விபரம் வருமாறு:

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் வழங்கப்பட்டுள்ள இலங்கை மத்திய வங்கியினால் 2015ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட திறைசேறிமுறி விநியோகங்கள் பற்றி விசாரித்து அறிக்கையிடுவதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வின் அறிக்கையை பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலரும் அறிந்துகொள்ளும் வகையில் சபையில் சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரினால் 2020 ஜனவரி 03ஆம் திகதி சபையிலும், வெளியிலும் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, 2020 ஜனவரி 13ஆம் திகதி பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் நடத்திய கூட்டத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கையையும் கருத்தில் கொண்டு எனது முடிவினை பாராளுமன்றத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.

 

2015 ஆம் இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய திறைசேரிமுறி வழங்கல் தொடர்பில் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் 2016ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட விசாரணையின்போது, திறைசேரிமுறி விநியோகம் பற்றி விரிவாக ஆராயப்பட்டதுடன், அதனால் ஏற்பட்ட நஷ்டம் அறிந்துகொள்ளப்பட வேண்டும் என்பதைக் கவனத்தில் கொண்டு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

 

அதனைத் தொடர்ந்து, திறைசேரிமுறி வழங்கல் குறித்து விசாரணை நடத்திய விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய இலங்கை மத்திய வங்கியின் கண்காணிப்பில், திறைசேரிமுறி விநியோகம் பற்றி தடயவியல் கணக்காய்வை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 

இலங்கை மத்திய வங்கி தொடர்பில் கணக்காய்வாரள் நாயகத்தினால் பெற்றுக் கொடுக்கப்பட்ட வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் பற்றிய அவரின் கண்காணிப்புக்கள் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் ஆராயப்பட்டபோது, குறித்த தடயவியல் கணக்காய்வு முன்னெடுக்கப்படும் முறைமை, அதற்கான செலவு மற்றும் அதனுடன் தொடர்புபட்ட விடயங்களை மத்திய வங்கியின் உயர் அதிகாரிகள் குழுவின் முன்னிலையில் முன்வைத்திருந்தனர்.

 

அவ்வாறான கணக்காய்வு தொடர்பில் நிபுணத்துவம் கொண்ட சர்வதேச பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் கணக்காய்வின் இறுதி அறிக்கை இலங்கை மத்திய வங்கிக்கு கிடைத்திருந்ததுடன், அந்த அறிக்கையை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு அதன் தலைவர் எழுத்துமூலம் விடுத்த கோரிக்கைக்கு அமைய சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய திறைசேரிமுறி விநியோகம் தொடர்பில் தற்பொழுது நடைபெறுகின்ற விசாரணைகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் குறித்த குழுவின் உறுப்பினர்களுக்கு மாத்திரம் வழங்கும் நோக்கி;ல் மத்திய வங்கியினால், அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு குறித்த தடயவியல் கணக்காய்வு அறிக்கை அக்குழுவின் தலைவரிடம் வழங்கப்பட்டது.

 

அதன் பின்னர் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் குறித்த அறிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கூட்டத்தைக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், 02.12.2019ஆம் திகதி எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதுடன் நிலையியற் கட்டளைக்கு அமைய அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் செயற்பாடுகள் கலைக்கப்பட்டன. எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரில் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு மீண்டும் நியமிக்கப்படும்வரை, அக்குழு இதுபற்றி ஆராய மேலும் காலம் தேவைப்படுவதாலும் குறித்த குழுவின் கண்காணிப்பாளர் என்ற பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது.

 

விசேடமாக பொதுமக்களின் நிதி நிர்வாகம் தொடர்பில் முழுமையான அதிகாரம் பாராளுமன்றத்துக்கு இருப்பதுடன், குறிப்பாக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு காணப்படும் அதிகாரத்துடன், 136வது நிலையியற் கட்டளைக்கு அமைய எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கும் அமைவாக பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பில் எந்தவொரு வெளித்தரப்பினதும் தலையீடு இன்றி சுயாதீனமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமை எனக் உள்ளது என்பதைத் தெரிவிப்பதுடன், எனக்கு முன்னிருந்த சபாநாயகர் அநுர பண்டாரநாயக்க வழங்கி வரலாற்று தீர்ப்பையும் கவனத்தில் கொண்டுள்ளேன்.

 

அதேநேரம், இந்த தடயவியல் கணக்காய்வு அறிக்கையை மேற்கொள்வதற்கு தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கு பெருமளவு செலவு செய்யப்பட்டிருப்பதுடன், இந்த அறிக்கையை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல உறுப்பினர்களுக்கும் பொற்றுக்கொடுப்பது உசிதமானது என நாம் வெகுவாக நம்புகின்றேன்.

 

அத்துடன், அரசியலமைப்பின் 14 (ஏ) சரத்துக்கு அமைய தகவல்களை அறிந்துகொள்வது அடிப்படை மனித உரிமையாகும் என்பதையும் நான் கவனத்தில் கொண்டுள்ளேன். இதற்கமைய இலங்கை மத்திய வங்கியின் திறைசேரிமுறி வழங்கல் குறித்த தடயவியல் கணக்காய்வு அறிக்கையை சபையில் சமர்ப்பிப்பது பொருத்தமானது என நான் கருதுகின்றேன். அதேநேரம், இந்த அறிக்கையானது திறைசேரிமுறி தொடர்பில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள சட்ட விசாரணைகள் மற்றும் எதிர்காலத்தில் நடைபெறக்கூடிய சட்டவிசாரணைகள் மற்றும் நீதிமன்ற விசாரணைகளை சட்டத்துக்கு உட்பட்ட ரீதியில் முன்னெடுக்க இடையூறாக அமையாது என்றும் நான் நம்புகின்றேன்.



தொடர்புடைய செய்திகள்

2026-08-28

இலங்கை பாராளுமன்ற அதிகாரிகள் புதுடில்லியில் ஆளுமை விருத்தி நிகழ்ச்சியில் பங்கேற்பு

இலங்கை பாராளுமன்றத்தின் ஒன்பது  திணைக்களங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற அதிகாரிகள் 25 பேர் கொண்ட குழுவினர், புதுடில்லியில் உள்ள இந்தியப் பாராளுமன்றமான லோக்சபா செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆளுமை விருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.இலங்கை பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி அனுஷா ரோஹணதீர அவர்களின் கோரிக்கையின் பேரில் இந்த ஆளுமை விருத்தி நிகழ்ச்சித் திட்டம், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டது. லோக்சபாவின் கௌரவ சபாநாயகர்   ஸ்ரீ ஓம்  பிர்லா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், லோக்சபா செயலகத்தின் செயலாளர் நாயகம் ஸ்ரீ உத்பல் குமார் சிங் அவர்களால் இத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட்டது. இந்த ஒத்துழைப்பின் பயனாக, இலங்கைப் பாராளுமன்றத்தைச் சேர்ந்த 50 அதிகாரிகளுக்கு இத்திட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சி திட்டத்தில் முதல் தொகுதியைச் சேர்ந்த 25 இலங்கை பாராளுமன்ற  அதிகாரிகள் கடந்த மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஆளுமை விருத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இக்குழுவுக்கு இலங்கை  பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன அவர்கள் தலைமை தாங்கினார். இரண்டாவது தொகுதியைச் சேர்ந்த 25 இலங்கை பாராளுமன்ற அதிகாரிகள், இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி அனுஷா ரோஹணதீர அவர்களின் தலைமையில், தற்போது புதுடில்லியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.இரு கட்டங்களாக நடத்தப்படும் இத்திட்டங்களும் லோக்சபா செயலகத்தின் ஜனநாயகங்களுக்கான பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (PRIDE) மூலம் முன்னெடுக்கப்படுகின்றன. பாராளுமன்ற அதிகாரிகளின் தொழில்சார் அறிவு, திறன்கள் மற்றும் நிறுவன ரீதியான ஆற்றலை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.புதுடில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் விசேட விருந்தினர் முனையத்தை வந்தடைந்த இலங்கை பாராளுமன்ற அதிகாரிகள் குழுவை, லோக்சபா செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் அன்புடன் வரவேற்றனர்.ஆரம்ப தினத்தன்று இலங்கைப் பாராளுமன்ற அதிகாரிகள் குழுவினர், இந்திய பாராளுமன்ற கட்டட வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.ஆளுமை விருத்தித் திட்டத்தின் கீழ் பாராளுமன்ற நிர்வாகம் மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பான பரந்தளவிலான விடயங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.  சர்வதேச பாராளுமன்ற உறவுகள் மற்றும் நெறிமுறைகள், பாராளுமன்றத்திற்கான நிர்வாகத்தின் பொறுப்புக்கூறல், பாராளுமன்றக் குழுக்களின் பங்கு மற்றும் பணிகள், லோக்சபா செயலகத்தின் நிறுவன அமைப்பு மற்றும் அதன் நிர்வாகப் பிரிவின் செயற்பாடுகள் ஆகியவை குறித்த கலந்துரையாடல்கள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள் இதில் அடங்குகின்றன.மேலும், பாராளுமன்ற குழுச் செயலகங்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் செயற்பாடு மற்றும் நிர்வாகம், பாராளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் ஒழுக்கநெறிகள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சேவைகள், கொடுப்பனவுகள் மற்றும் நலன்புரிச் சேவைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் பங்கேற்பாளர்களுக்கு தெளிவூட்டல் வழங்கப்படுகிறது.செயலகத்தின் வரவு–செலவுத் திட்டத்தைத் தயாரித்தல், ஒருங்கிணைந்த நிதிப் பிரிவின் (IFU) பணிகள், வரவுசெலவு மற்றும் கொடுப்பனவுக் (B&P) கிளை, அத்துடன் சட்டவாக்க மன்றங்களின் தலைமைதாங்கும் அதிகாரிகளின் பங்கு மற்றும் அதிகாரங்கள் ஆகியவை பற்றிய கலந்துரையாடல்களும் இதில் அடங்கியுள்ளன.இலங்கை பாராளுமன்ற அதிகாரிகள் இந்திய பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள லோக்சபா மற்றும் ராஜ்ய சபா ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.இதன் மூலம் இந்திய பாராளுமன்ற உட்கட்டமைப்பு மற்றும் ஆதரவுச் சேவைகள் தொடர்பில் இலங்கை பாராளுமன்ற அதிகாரிகளுக்கு நேரடி அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.கல்வி மற்றும் நிறுவன ரீதியான பயிற்சி அமர்வுகளுக்கு மேலதிகமாக, இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஆக்ராவிற்கான கலாசார விஜயமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்தத் திட்டமானது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்ச்சியான பாராளுமன்ற ஒத்துழைப்பு மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாகும். இதன் மூலம் இரு பாராளுமன்றங்களின் அதிகாரிகளும் தமது அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதுடன், பாராளுமன்ற நடைமுறைகள், நிர்வாகம் மற்றும் ஜனநாயக நிறுவனங்கள் தொடர்பான ஆழமான புரிதலைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பையும் பெறுகின்றனர்.இலங்கைப் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம், தொடர்பாடல் திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் சன்சத் தொலைக்காட்சி நிலையத்திற்கு விஜயம் செய்து அதன் செயற்பாடுகளைப் பார்வையிட்டனர்.தொடர்ச்சியான தொகுதிகளாக இரு நாட்டு பாராளுமன்ற செயலகள்க்கு இடையிலான வளர்ந்து வரும் நிறுவன ரீதியான ஈடுபாட்டை எடுத்துக்காட்டுகிறது. அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையில் பாராளுமன்ற நிபுணத்துவம் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும் இத்திட்டம் முக்கிய பங்களிப்பை வழங்குகிறது.


2026-08-21

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடுக்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.


2026-08-21

கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல்

சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்  குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.


2026-08-20

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடு நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks