பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2019-06-04
செய்தி வகைகள் : செய்திகள்
இலங்கையின் இன மற்றும் மத ஒற்றுமையை உறுதிசெய்வதை ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்துக்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழுவின் ஐந்தாவது கூட்டம் குழு அறை இல. 01 இல் இன்று இடம்பெற்றது. சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்கள் தலைமை வகித்தார்.
நாட்டில் தற்போது எழுந்துள்ள நிலைமை தொடர்பாகவும் 2019.02.22 ஆம் திகதிய விசேட குழுவின் இடைக்கால அறிக்கையில் குறித்துரைக்கப்ப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பாகவும் வட்ட மேசை கலந்துரையாடலொன்றை இக்குழு நடத்தியது.
2026-04-14
இன்று இயற்கையில் வசந்த காலத்தின் உதயத்தையும், பாரம்பரிய சூரிய நாட்காட்டி மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு மாறும் நாளையும் குறிக்கிறது. அதன்படி, முதலாவதாக, உள்ளூர் இலங்கை மக்களுக்கும், தங்கள் தாயகத்திலிருந்து உடல்ரீதியாக வெகு தொலைவில் இருந்தாலும், தற்போது தங்கள் தாய்நாட்டுடன் ஆழமாக இணைந்திருக்கும் வெளிநாடுகளில் வாழும் இலங்கை மக்களுக்கும் வளமான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட புத்தாண்டாக அமைய பிரார்த்திக்கின்றேன். சிங்கள தமிழ் புத்தாண்டு என்பது ஒரு புதிய ஆண்டின் உதயம் மட்டுமல்ல, இலங்கையின் கலாச்சாரப் பாரம்பரியத்தை வருங்கால சந்ததியினருக்குக் கடத்தும் வகையில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் ஒரு தேசிய விழாவுமாகும். அதேபோல, ஒரு புதிய ஆண்டின் உதயத்துடன், இலங்கையர் ஒரே தேசமாக ஒன்றிணைந்து, ஒரே நேரத்தில் தங்கள் அன்றாடப் பணிகளைத் தொடங்குவதன் மூலம், அமைதி, மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் ஒற்றுமையுடன், ஒரு தேசமாக நமது ஒற்றுமையை உலகிற்குப் பிரதிபலிக்கிறோம். பழைய மனக்குறைகளையும் வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்து, ஒத்துழைப்பையும் சகோதரத்துவத்தையும் வலுப்படுத்தி, புதிய இலக்குகளுடன் ஒரு புதிய ஆண்டைத் தொடங்குவதே புத்தாண்டின் உண்மையான அடையாளங்களாகும்.நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு படிப்படியாக மீண்டு வரும் ஒரு காலகட்டத்தை நாம் தற்போது கடந்து கொண்டிருக்கிறோம். அதே சமயம், கடந்த ஆண்டில், தித்வா போன்ற ஒரு பெரும் இயற்கை பேரழிவையும் ஒரு நாடாக நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், ஒரு இலங்கை தேசமாக நாம் மீண்டும் எழுந்து நிற்க முடிந்த வலிமையானது, மத்திய கிழக்கில் நாம் தற்போது சந்தித்து வரும் இராணுவ சவாலை எதிர்கொள்ளவும் நமக்கு உதவும். எனவே, இப்புத்தாண்டு, ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமை போன்ற புத்தாண்டின் உண்மையான அர்த்தங்களைப் பிரதிபலிக்கும் ஆண்டாக அமையும் என நான் நம்புகிறேன்.ஆகவே, நம் வழியில் வரும் அனைத்து தடைகளையும் சவால்களையும் கடந்து, வளமான எதிர்காலத்தைக் கொண்ட ஒரு நாட்டை உருவாக்க கைகோர்க்குமாறு உங்களை அழைக்கிறேன். நீங்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காத்து, நம் அனைவரின் பொதுவான இலக்குகளை நிறைவேற்றுவதில் நாங்கள் தொடர்ந்து நம்மை அர்ப்பணிப்போம்.சிங்கள-தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடும் உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னமாண்புமிகு சபாநாயகர்இலங்கைப் பாராளுமன்றம்
2026-04-10
கௌரவ வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி அவர்களுக்கு எதிராக எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 104 மேலதிக வாக்குகளால் இன்று (ஏப். 10) பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று (10) இடம்பெற்றதுடன், விவாதம் முடிவடைந்ததும் பி.ப 6.00 மணியளவில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 49 வாக்குகளும், எதிராக 153 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
2026-04-10
சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலத்தை கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் நேற்று (ஏப். 09) சான்றுரைப்படுத்தினார்.சமூகப் பாதுகாப்பு உதவுதொகை (அறவீடு) திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு விவாதம் 2026.04.07ஆம் திகதி இடம்பெற்றதுடன், இரண்டாவது மதிப்பீடு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலத்தின் ஊடாக 2022ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டம் திருத்தப்படுவதுடன், இந்த வரி விதிப்பிற்கான பதிவிற்குத் தேவைப்படும் விற்பனைவரவு வரம்பைக் குறைப்பதும், மோட்டார் வாகனங்கள் தொடர்பான சில விலக்களிப்புக்களை வழங்குவதும் இதன் சட்டப்பயனாகும்.இந்தச் சட்டத்தின் மூலம் சமூகப் பாதுகாப்பு உதவுதொகைக்கான பதவின் மொத்த விற்பனை வரம்பு ஆண்டொன்றுக்கு அறுபது மில்லியன் ரூபாவிலிருந்து முப்பது மில்லியன் ரூபாவாகக் குறைக்கப்படுகின்றது. திருத்தப்பட்ட வரம்பிற்கு இணங்க, புதிய பதிவுத் தேவைகளும் பதிவை இரத்து செய்வது தொடர்பான விதிமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மோட்டார் வாகனங்கள் தொடர்பான விலக்களிப்புக்கள் பற்றிய ஏற்பாடுகளும் திருத்தப்பட்டுள்ளன.இதற்கமைய, சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலம் 2026ஆம் ஆண்டின் 10ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமாக அமுலுக்கு வருகின்றது.
2026-04-07
அரசாங்கக் கட்சியினால் கொண்டு வரப்படும் தற்போது நிலவும் நிலைமை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் நாளைபாராளுமன்றத்தை நாளையதினம் (08) கூட்டுவதற்கு கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஏப். 07) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சகல புதன்கிழமைகளிலும் அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டமையால் நாளையதினம் (08) பாராளுமன்றத்தை கூட்டாமல் இருப்பதற்கு இதற்கு முன்னர் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.இதற்கு அமைய நாளையதினம் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து மு.ப 11.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை அரசாங்கக் கட்சியினால் கொண்டுவரப்படும் தற்பொழுது நிலவும் நிலைமை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், எதிர்வரும் 9 மற்றும் 10ஆம் திகதிகளில் பாராளுமன்ற அலுவல்களில் எவ்வித மாற்றமும் இல்லை.அத்துடன், சிங்கள – புத்தாண்டு கொண்டாட்டங்கள் காரணமாக ஏப்ரல் இரண்டாவது வாரத்திற்கான பாராளுமன்ற அமர்வுகளை நடத்தாதிருப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks



