logo

E   |   සි   |  

2017-04-20

செய்தி வகைகள் : செய்திகள் 

“ஆசிய -பசுபிக் பிராந்தியத்தின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பிராந்தியக் கூட்டத்தை” இலங்கைப் பாராளுமன்றம் நடத்தவுள்ளது

ஆசியா -பசுபிக் பிராந்தியத்தின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பிராந்தியக் கூட்டம் 2017 ஏப்பிறல் 25 தொடக்கம் 26 ஆம் திகதி வரை இலங்கை, கொழும்பிலுள்ள ஹில்டன் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.

 

அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியம் (IPU), ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (UNDP) மற்றும் இலங்கைப் பாராளுமன்றம் ஆகிவற்றால் கூட்டாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இக்கூட்டம், “உள்ளடங்கலான மற்றும் அமைதியான சமூகங்களை முன்னேற்றுதல் மற்றும் வன்முறைசார் தீவிரவாதத்தைத் தடுத்தல் என்பவற்றில் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களின் வகிபங்கு” பற்றியதாக அமையும்.

 

ஆசிய–பசுபிக் பிராந்தியத்திலுள்ள முப்பத்தொன்பது (39) நாடுகளின் தேசியப் பாராளுமன்றங்களைச் சேர்ந்த இளம் பாராளுமன்ற உறுப்பினர்களையும், அத்துடன் தெரிவு செய்யப்பட்ட இளைஞர் அமைப்புகள், வலையமைப்புகள் மற்றும் சங்கங்களைச் சேர்ந்த அதானிப்பாளர்கள் ஆகியோரை இக்கூட்டம் ஒன்றிணைக்கும். இலங்கைப் பிரதிநிதிகள் குழு, ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.), ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னைி (ஐ.ம.சு.மு.), மக்கள் விடுதலை முன்னைி (ம.வி.மு.) மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (இ.த.அ.க.) ஆகியவற்றைச் சேர்ந்த 20 இளம் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.

 

2017 ஏப்பிறல் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஆரம்ப வைபவத்தில் பிரதம அதிதியாக பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க பிரதான உரை ஆற்றுவார். பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய, பா.உ., அங்குரார்ப்பண நிகழ்வில் வரவேற்புரை ஆற்றி நிகழ்வை சிறப்பிப்பார்.

 

அண்மைக் காலங்களில் பல அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்த வன்முறைசார் தீவிரவாதத்தின் புதிய அலைகளை உலகம் கண்டுள்ளதால், மாநாட்டில் வன்முறைசார் தீவிரவாதத்தைத் தடுத்தல் (PVE) மீது குறிப்பாக வலியுறுத்தல் மேற்கொள்ளப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. வன்முறைசார் தீவிரவாதத்தைத் தடுப்பதற்காகவும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை, விசேடமாக “நிலைபேறான அபிவிருத்திக்கு சமாதானமான மற்றும் உள்ளடக்கமான சமூகங்களை ஊக்குவித்தல், அனைவருக்கும் நீதியை அணுகும் வசதியை வழங்குதல், அனைத்து மட்டங்களிலும் வினைத்திறன் மிக்க மற்றும் நம்பகத்தன்மை கொண்ட உள்ளடக்கமான நிறுவனங்களைக் கட்டியெழுப்புதல்” ஆகிவற்றை உள்ளடக்கிய இலக்கு – 16ஐ வெற்றிகரமாக அமுலாக்குவதற்காகவும் இளைஞர்களைத் முனைப்பான விதத்தில் ஈடுபடுத்துதல் கட்டாயமானதாகும்.

 

இதன் பிரகாரம், இளம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிராந்தியக் கூட்டம் கொள்கை உருவாக்குநர்களுக்கிடையே வன்முறைசார் தீவிரவாதத்தைத் தடுத்தல் தொடர்பான பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, வன்முறைசார் தீவிரவாதத்தைத் தடுத்தலைக் கையாள்வதற்கு இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை அடையாளம் கண்டு அத்துடன் வன்முறைசார் தீவிரவாதத்தைத் தடுப்பதற்காக பாராளுமன்றங்கள் மற்றும் இளைஞர்களுக்கிடையே தொடர்பாடலையும் ஒருங்கிணைப்பையும் எவ்வாறு அதிகரிக்கலாம் எனவும் முன்வமாழியும்.

 

கூட்டத்தைத் தொடர்ந்து, இலங்கைப் பாராளுமன்றத்தினால் பங்குபற்றுனர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கண்டிக்கான (தலதா மாளிகை மற்றும் பின்னவல யானைகள் சரணாலயம்) சுற்றுலாவொன்று இடம்பெறும்.

 



தொடர்புடைய செய்திகள்

2026-08-21

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடுக்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.


2026-08-21

கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல்

சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்  குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.


2026-08-20

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடு நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


2026-08-20

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் இன்று (ஆக. 20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டத்தின் கீழ், இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக, பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தம்) சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks