E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2012 ஆம் ஆண்டிற்கான தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள்

(ii) 2013 ஆம் ஆண்டிற்கான தேசிய நூதனசாலைத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை


பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-

• மறைந்த கௌரவ டியுடர் தயாரத்ன
• மறைந்த கௌரவ ஆர்.எம். அப்புஹாமி


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

பின்வரும் இரண்டாம் மதிப்பீட்டு சட்டமூலங்கள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான விடயங்களாகக் காணப்படுபவை) சபையால் அங்கீகரிக்கப்பட்டு, (சட்டவாக்க) நிலையியற்குழு “ஏ” க்கு ஆற்றுப்படுத்தப்பட்டன:-

(i) அசோக செல்லஹேவா புலமைப்பரிசில் மன்றம் (கூட்டிணைத்தல்)
(ii) செய்யது சேஹுகோயா தங்கள் மெளலானா மன்றம் (கூட்டிணைத்தல்)
(iii) ஸ்ரீ குணரதன சர்வதேச மன்றம் (கூட்டிணைத்தல்)

பின்வரும் இரண்டாம் மதிப்பீட்டு சட்டமூலங்கள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 4 முதல் 7 வரையான விடயங்களாகக் காணப்படுபவை) சபையால் அங்கீகரிக்கப்பட்டு, (சட்டவாக்க) நிலையியற்குழு “பீ” க்கு ஆற்றுப்படுத்தப்பட்டன:-

(i) வைட் றோஸ் மன்றம் (கூட்டிணைத்தல்)
(ii) ஐக்கிய முஸ்லிம் உம்மா (கூட்டிணைத்தல்)
(iii) ஸ்ரீ பாலாபிவூர்தி வர்தன சமிதிய (கூட்டிணைத்தல்)
(iv) செரெட்செ காமா மன்றம் நம்பிக்கைப் பொறுப்பு (கூட்டிணைத்தல்)


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“காஸாவிலுள்ள பலஸ்தீனயர்கள் இஸ்ரேலினால் தாக்கப்படல்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1845 மணியளவில் பாராளுமன்றம் 2014 ஆகஸ்ட் 05ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks