பார்க்க

E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, சட்டத்தினாலும், 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டத்தினாலும் திருத்தப்பட்டவாறான 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதிகள், ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் 4(3), 14 மற்றும் 20 ஆம் பிரிவுகளின் கீழ் நிதி, திட்டமிடல் அமைச்சரால் ஆக்கப்பட்டு 2013  யூலை மாதம் 18 ஆம் திகதிய 1819/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள்


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க அவர்களுக்கு “உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழ் தீர்மானம்

சபையால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“கொழும்பு தெற்கு துறைமுகத்தின் கொள்கலன் கையாளுகை பகுதியும் அலைதாங்கியும்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1900 மணியளவில் பாராளுமன்றம் 2013 ஆகஸ்ட் 08ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks