E   |   සි   |  

சபை அலுவல்கள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 5 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன. (i) ஊழியர் சகாய நிதிய (விசேட ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டமூலம் திருத்தங்களுடன் சபையால் நிறைவேற்றப்பட்டது. (ii) வாரியபொல ராஜமகா விஹாரை அபிவிருத்திச் சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் இதன் இரண்டாம் மதிப்பீடு நிறைவேற்றப்பட்டு “பீ” நிலையியற்குழு (சட்டவாக்கம்) விற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது. (iii) செரண்டிப் கல்வி நம்பிக்கை நிறுவனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் பரிசீலனைக்கெடுக்கப்பட்டு சபையால் நிறைவேற்றப்பட்டது. (iv) சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரி (கூட்டிணைத்தல்) சட்டமூலம் பரிசீலனைக்கெடுக்கப்பட்டு சபையால் நிறைவேற்றப்பட்டது. (v) எதிர்கால உலக ஒழுங்கமைப்பு (கூட்டிணைத்தல்) சட்டமூலம் பரிசீலனைக்கெடுக்கப்பட்டு சபையால் நிறைவேற்றப்பட்டது. ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை 'கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள அண்மைக் காலப் பிரச்சினைகள்' எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ஆர்.எம். ரஞ்சித் மத்துமபண்டார அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனையடுத்து, 1537 மணியளவில் பாராளுமன்றமானது 2009 செப்டெம்பர் 08 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks