E   |   සි   |  

2020 நவம்பர் 28ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சு தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 119(4) ஆம்  பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ தயாசிறி ஜயசேக்கர                -     மூன்று மனுக்கள்
(ii)     கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன                    
(iii)     கௌரவ வசந்த யாப்பாபண்டார                    
(iv)     கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


சிறப்புரிமைக் கேள்விகள்

கௌரவ எம்.ஏ. சுமந்திரன்

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு தான் சமூகமளிக்காமை தொடர்பான ‘டெய்லி நியூஸ்’ இன் அறிக்கை


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  (2021) சட்டமூலம்  - குழு

ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட பத்தாம் நாள் - குழு நிலை விவாதம்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“கொவிட் - 19 தொற்றினால் வெளிநாடுகளில் வேலை செய்யும் நபர்கள் எதிர்நோக்கியிருக்கும் நெருக்கடியான நிலைமையிலிருந்து விடுவித்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சமிந்த விஜேசிறி அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றமானது 2020 நவம்பர் 30ஆந் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2021]


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks