E   |   සි   |  

2020 நவம்பர் 27ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பெருந்தோட்ட அமைச்சு தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 119(4) ஆம்  பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண        -     மூன்று மனுக்கள்
(ii)    கௌரவ எஸ்.எம். மரிக்கார்                    
(iii)    கௌரவ சுதத் மஞ்சுல

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாஸ

“த பினேன்ஸ் கம்பனி”யின் வைப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

கொவிட் -19 காரணமாக கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தொடர்பாக 2020.11.24 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ சஜித் பிரேமதாஸ அவர்கள் எழுப்பிய வினாவிற்கு நிதி அமைச்சர் சார்பாக சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில், தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர், கௌரவ செஹான் சேமசிங்க அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  (2021) சட்டமூலம்  - குழு

ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட ஒன்பதாம் நாள் - குழு நிலை விவாதம்


அதனையடுத்து, 1815 மணியளவில் பாராளுமன்றமானது 2020 நவம்பர் 28ஆந் திகதி சனிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2021]


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks