E   |   සි   |  

2016 மார்ச் 11ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ திலங்க சுமதிபால, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ சுசந்த புஞ்சிநிலமே        
(ii) கௌரவ அருந்திக்க பர்னாந்து      
(iii) கௌரவ பிமல் ரத்நாயக்க          
(iv) கௌரவ சீனித்தம்பி யோகேஸ்வரன்      
(v) கௌரவ முஹமட் நவவி          
(vi) கௌரவ ச. வியாழேந்திரன்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துதல் தொடர்பாக கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களால் எழுப்பிய வினாவுக்கு பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 5 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான மூன்று கட்டளைகள்
(ii) வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் சட்டமூலம் - திருத்தங்களுடன்
(iii) வேலையாளர்களின் வரவுசெலவுத் திட்ட நிவாரணப்படி சட்டமூலம் - திருத்தங்களுடன்


அதனையடுத்து, 1833 மணியளவில் பாராளுமன்றம் 2016 மார்ச் 23ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks