E   |   සි   |  

2015 டிசம்பர் 05ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

பின்வரும் அறிவித்தல் விடுக்கப்பட்டது.-

‘A’ : ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2016) குழுநிலையின் போது பல்வேறு அமைச்சுக்களிலிருந்தான முன்னேற்றம் அறிக்கைகளை CD / DVD கள் மூலம் விநியோகம் தொடர்பான சபாநாயகரின் தீர்ப்பு


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கெளரவ ஜோன் அமரதுங்க - மூன்று மனுக்கள்
(ii) கௌரவ வஜிர அபேவர்தன - இரண்டு மனுக்கள்
(iii) கெளரவ சுனில் ஹந்துன்னெத்தி - பன்னிரண்டு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா அவர்கள், இவ்வமைச்சினால் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரம் தொடர்பாக பத்திரிகையில் வெளிவந்த அறிக்கை பற்றி சபையில் கூற்றினை முன்வைத்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2016) – குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2016) ஒதுக்கப்பட்ட பன்னிரெண்டாம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“தேசிய புத்தக அபிவிருத்தி சபையினை மீண்டும் நிறுவதல்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1950 மணியளவில் பாராளுமன்றமானது 2015 டிசம்பர் 07ஆந் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2016]


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks