பார்க்க

E   |   සි   |  

2015 ஜூன் 12ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ முருகேசு சந்திரகுமார், குழுக்களின் பிரதித் தவிசாளர் தலைமை வகித்தார்கள்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

(i) வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர
(ii) வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாஸ

ஆகியோர் சபையில் கூற்றுக்களை முன்வைத்தனர்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

இலங்கை சமுத்திர பல்கலைக்கழக சட்டத்தின் கீழ் கட்டளை

விவாதமின்றி சபையால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“மியன்மாரிலுள்ள றோகின்யா முஸ்லீம் சிறுபான்மையினரின் அவலம்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ மொஹமட் அஸ்லம் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1500 மணியளவில் பாராளுமன்றம் 2015 ஜூன் 23ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks