பார்க்க

E   |   සි   |  

2015 ஏப்ரல் 28ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ சந்திம வீரக்கொடி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகர் பத்திரங்களைச் சமர்ப்பித்தல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்,

• 2012 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின்   அறிக்கையின் முதலாவது தொகுதியின் VIII, IX மற்றும் X  ஆம் பகுதிகள், இரண்டாவது தொகுதியின்  XIX ஆம் பகுதி மற்றும் ஆறாவது தொகுதியின் XIII, XIV மற்றும் XV ஆம் பகுதிகள்; மற்றும்

• 2013 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின்   அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் II மற்றும் III ஆம் பகுதிகள் மற்றும் நான்காவது தொகுதியின் III ஆம் பகுதி


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i) தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி அலுவல்கள்
(ii) சுகாதார அலுவல்கள்
(iii) தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி

பற்றிய ஆலோசனைக் குழுக்களின் அறிக்கைகள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டன.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தச் சட்டமூலம்

சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீடு பெயர்மூல வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு, பின்னர் சபையால் நிறைவேற்றப்பட்டது. (ஆதரவாக 215 ; எதிராக 01) 

சட்டமூலம் மீதான மூன்றாம் மதிப்பீடு பெயர்மூல வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு (ஆதரவாக ; எதிராக ; சமுகமளிக்காதோர் ) மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் சபையால் நிறைவேற்றப்பட்டதுடன் சட்டமூலமானது திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.


அதனையடுத்து,  மணியளவில் பாராளுமன்றம் 2015 மே 19ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks