04

E   |   සි   |  

 திகதி: 2018-06-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0391/2018: Students in Ratnapura District who study in Tamil Medium

391/ '18

கெளரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள தமிழ் மொழிமூல பாடசாலைகளின் எண்ணிக்கை எவ்வளவு;

(ii) மேற்படி பாடசாலைகளில் ஆரம்பநிலை மற்றும் இரண்டாம் நிலை பாடசாலைகளின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு;

(iii) மேற்படி பாடசாலைகளில் மத்திய அரசுக்குரிய பாடசாலைகளின் எண்ணிக்கை எவ்வளவு;

(iv) அந்த பாடசாலைகளின் பெயர்கள் யாவை;

(v) தமிழ் மொழிமூலம் கல்வி கற்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இரத்தினபுரி மாவட்டத்தில்,

(i) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றை வரை ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் சித்தியடையாத மாணவர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு;

(ii) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை க.பொ.த.(சாதாரண தர) மற்றும் க.பொ.த (உயர் தர) பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் சித்தியடையாத மாணவர்களின் எண்ணிக்கை வெவ்வெறாக எவ்வளவு;

(iii) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை பொறியியல் மற்றும் மருத்துவ துறையில் கற்பதற்கு பல்கலைக்கழகங்களுக்கான தகைமைகளைப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு;

(iv) சிங்கள மொழிமூல மற்றும் தமிழ் மொழிமூல மாணவர்களுக்கிடையே மேற்காண் பரீட்சைகளில் சித்தியடைந்த மற்றும் சித்தியடையாத மாணவர்களின் எண்ணிக்கை சதவீதமாக எவ்வளவு;

என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-07

கேட்டவர்

கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks