பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2018-07-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

0135/2018: Preventing Waste disposal in the Digampathana Forest Reserve Dambulla

135/ '18

கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன,— மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) தம்புள்ள, திகம்பத்தன பிரதேசத்தில் பாதுகாப்பு வனமொன்று அமைந்துள்ளது என்பதையும்;

(ii) பிரதேசத்திலுள்ள உள்ளூராட்சி நிறுவனத்தினால் இந்த இடத்தில் குப்பைகள் அகற்றப்படுகின்றன என்பதையும்;

(iii) குப்பைகள் அகற்றப்படுவதன் காரணமாக பிரதேசத்திலுள்ள காட்டு யானைகள் இவ்விடத்தில் அடிக்கடி நடமாடுகின்றன என்பதையும்;

(iv) இங்கு உணவு இல்லாதபோது இந்த யானைகள் சுற்றுப்புறக் கிராமங்களுக்குள் பிரவேசிக்கின்றன என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) ஆமெனில், மனிதர்களினதும் யானைகளினதும் பாதுகாப்புக் கருதி இவ்விடத்தில் குப்பைகள் அகற்றப்படுவதை நிறுத்த அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-07-05

கேட்டவர்

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks