01

E   |   සි   |  

 திகதி: 2017-07-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

1731/2017: மட்டக்களப்பு கடல் மணல் படுக்கைக்கு அண்மையிலான மண் அகழ்தல் கருத்திட்டம்: மீள ஆரம்பித்தல்

கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா,— கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 1980 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு கடல் மணல் படுக்கைக்கு அண்மையில் மண் அகழ்தல் கருத்திட்டமொன்று இடம்பெற்றது என்பதையும்;

(ii) பயங்கரவாதச் செயற்பாடுகளின் நிமித்தமாக அக்கருத்திட்டம் அரைவாசியில் நிறுத்தப்பட்டது என்பதையும்;

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(ஆ) (i) கடலையும் வாவியையும் இணைக்கும் வாய் வருடாந்தம் மூடப்படாதிருத்தல்;

(ii) வருடம் பூராவும் வாவியில் மீன் பிடிக்கும் மீனவர்கள் மீன்பிடி நன்மையைப் பெற்றுக்கொள்ளல்;

(iii) ஆழ்நீர் மீன் பிடிக்கும் படகுகளும் இழுவைப் படகுகளும் நங்கூரமிடுவதற்கு இலகுவாக வாவிக்குள் வரக்கூடியதாக இருத்தல்;

(iv) வெள்ள நீர் விரைவாக கடலுக்குள் செல்வதால் வெள்ளத்தின் பொழுது நெல் வயல்கள் சேதமடையாதிருத்தல்;

(v) வெள்ள நீர் இலகுவாக கடலுக்குள் செல்லுதல் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட வேண்டிய வெள்ள நிவாரண முயற்சிகளைக் குறைத்தல்;

என்பன இக்கருத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்பதை அவர் அறிவாரா?

(இ) (i) இக்கருத்திட்டத்தை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;

(ii) அவ்வாறாயின், அது எப்போது என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-07-06

கேட்டவர்

கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா, பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-07-06

பதில் அளித்தார்

கௌரவ திலிப் வெதஆரச்சி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks