01

E   |   සි   |  

 திகதி: 2017-08-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

1689/2017: மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கும் குடும்பங்கள்: வீடமைப்புத் திட்டம்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— மலை நாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2014 ஆம் ஆண்டில் மத்துகம, வோகன் தோட்டத்தின், கீழ்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவின் பின்னர் 14 குடும்பங்கள் கடும் இடர்காண் நிலைமையில் இன்னமும் அங்கு குடியிருக்கின்றனர் என்பதையும்;

(ii) இவ்விடத்திலிருந்து இம்மக்களின் குடியிருப்புகளை அகற்ற வேண்டுமென 2014 யூன் மாதத்தில் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பினால் தோட்ட முகாமைத்துவத்துக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்பதையும்;

(iii) மாற்று இடங்களை ஒதுக்குதல் தொடர்பில் தோட்ட முகாமைத்துவத்துக்கும் இம்மக்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக மாற்றுக் காணிகளை வழங்குதல் தாமதமாகியுள்ளது என்பதையும்;

(iv) இதனையொத்த மண்சரிவு ஆபத்து காணப்படுகின்ற அகலவத்த, டெல்கித் தோட்டத்தில், இலுப்புவத்த பகுதியிலும் 21 குடும்பங்கள் கடந்த ‍சுமார் 2 வருட காலமாக வசிக்கின்றனர் என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேலே குறிப்பிட்டவாறு பாதிப்புக்குள்ளாகி, உயிர் ஆபத்துக்கு முகம்கொடுத்துள்ள மக்களுக்காக ஏதேனும் வீடமைப்புத் திட்டமொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்வாரா;

(ii) ஆமெனில், அதன் தற்போதைய முன்னேற்றம் யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-08-24

கேட்டவர்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(அ)      (i)      அறிவேன். வோகன் தோட்டத்திற்காக 15 வீடுகள் 2014ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்டது. எனினும், பயனாளிகள் இத்திட்டத்தை ஏற்றுக் கொள்ள மறுத்ததுடன் அதே பகுதியில் தங்கள் சொந்த இடத்திலேயே தொடர்ந்தும் வாழ் கின்றனர். எனவே, அந்நிகழ்ச்சித் திட்டம் இரத்துச் செய்யப்பட்டது.

             (ii)       நான் அறிந்திருக்கவில்லை.

   (iii) தோட்ட முகாமைத்துவத்தால் வழங்கப்பட்ட காணி களை பயனாளிகள் ஏற்க மறுப்பதாக அறிவிக்கப்பட்டது.

    (iv) ஆம். டெல்கித் தோட்டத்தில் இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பாக 2016ஆம் ஆண்டின் நடுப்பகுதியில்  அறிவிக்கப்பட்டது. டெல்கித் தோட்டம் அமைந்திருப்பது அகல வத்தையில் அல்ல, பதுரலிய பிரதேசத்தில். தோட்டத்தில்  பாதிக்கப்பட்ட பிரிவு இலுக்வத்த அல்லது பிரிசிலன் என அழைக்கப்படுகின்றது.

(ஆ ) (i) குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு தோட்டங் களுக்கும் வீடுகளை வழங்குவதற்கான நடவடிக் கைகள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

     (ii)    விபரங்கள் பின்வருமாறு:

         வோகன் தோட்டம் - 2017ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டில் வோகன் தோட்டத்தின் இத்தகொட பிரிவுக்கு 22 வீடுகளும், வோகன் தோட்ட கீழ் பிரிவுக்கு 15 வீடுகளும் வழங்கப்படவுள்ளன. இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

          டெல்கித் தோட்டம் - 2017ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டில் டெல்கித் தோட்ட பிரிசிலோன் பிரிவிற்கு 21 வீடுகள் வழங்கப்படவுள்ளன. இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

(இ) பொருத்தமற்றது.

பதில் தேதி

2017-08-24

பதில் அளித்தார்

கௌரவ பழனி திகாம்பரம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks