logo

பார்க்க

02

E   |   සි   |  

 திகதி: 2010-10-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0415/2010: Stores - 175 A- Vauxhall Street

0415/ ‘10

கெளரவ ரீ.ரஞ்சித் த சொய்சா,— அரச வளங்கள், தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)    மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபைக்குச் சொந்தமான வொக் ஷோல் வீதி, இலக்கம் 175 ஏ, தொகுதியில் அமைந்துள்ள 5000 சதுர அடிகள் கொண்ட களஞ்சிய சாலை, கொழும்பு 02, வொக் ஷோல் வீதி 139ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள, சமர்வில் கம்பனி எனப்படும் கம்பனிக்கு ரூபா 67,500.00 மாதாந்த வாடகைக்கு குத்தகையில் விடப்பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) சம்பந்தப்பட்ட குத்தகை உடன்படிக்கைக்கு அரசின் விலை மதிப்பீட்டு அறிக்கையும், அமைச்சரவை அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளதா என்பதையும்,

(ii) சம்பந்தப்பட்ட குத்தகையாளர் குத்தகை உடன்படிக்கைக்கு அமைவாக நடந்துகொண்டுள்ளாரா என்பதையும்,

(iii) சட்டபூர்வமாக நடந்துகொண்டிருக்காவிடின், மேற்படி களஞ்சிய சாலையை மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபைக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்,

(iv) அவ்வாறின்றேல், அதற்கான காரணங்கள் யாவையென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-10-20

கேட்டவர்

கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

அமைச்சு

பெருந்தோட்டக் கைத்தொழில்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks