01

E   |   සි   |  

 திகதி: 2017-07-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

1577/2017: மண்டைக்கல்லாறு பாலம் மறுசீரமைக்கப்படாமை: காரணம்

 

கெளரவ எஸ். சிறீதரன்,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2010 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் - மன்னார் A-32 வீதி மறுசீரமைக்கப் பட்டதென்பதையும்;

(ii) ஆயினும், அந்த வீதியில் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள மண்டைக்கல்லாறு பாலம் மறுசீரமைக்கப்படவில்லை என்பதையும்;

(iii) இந்த பாலத்தின் ஊடாக மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களுக்கு பயணிக்க வேண்டுமென்பதையும்;

(iv) இலுப்பைக்கடவை, முழங்காவில் ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைகள் தேவைப்படுகின்ற நோயாளிகள் இந்த வீதியின் ஊடாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகையில் பாரிய சிக்கல்கள் தோன்றியுள்ளனவென்பதையும்;

(v) பாலம் சீரழிந்துள்ளமையால் கடந்த மழைக்காலங்களில் இந்த வீதி பயணஞ்செய்ய இயலாதவாறு பல வாரங்கள் தடைப்பட்டிருந்ததென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) பாலம் நிர்மாணிக்கப்படுவதாக அறிவித்தல் பலகையொன்று பொருத்தப்பட்டு அவசியமான பொருட்கள் அங்கு கொண்வரப்படுள்ள போதிலும் இற்றைவரை மறுசீரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படாமைக்கான காரணங்கள் யாவை;

(ii) மண்டைக்கல்லாறு பாலத்தை மறுசீரமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட பணத்திற்கு என்ன நேர்ந்தது;

(iii) அந்தப் பணம் மீளத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதா;

(iv) ஆமெனில் அதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யாவர்;

(v) இந்த பாலம் மறுசீரமைக்கப்படும் திகதி யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-07-26

கேட்டவர்

கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

* සභාමේසය මත තබන ලද පිළිතුර:

* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :

* Answer tabled:

 

(අ)           (i)      ඔව්.

               (ii)      ඔව්.

              (iii)      මෙම මාර්ගය පහසු මාර්ගය වුවද වෙනත් විකල්ප මාර්ග ද පවතී.

              (iv)       දැනට මෙම ස්ථානයේ පැරණි පාලම වෙනුවට නව පාලමක් ඉදිකිරීම ආරම්භ කර ඇත. ඉදිකිරීම් කටයුතු අවසන් වන තෙක් පැරණි පාලමේ ගමන් කිරීමට සිදුවීම නිසා අපහසුතා ඇති විය හැකිය.

              (v)       2016 නොවැම්බර් මාසයේ සිට පාලමේ ඉදිකිරීම් කටයුතු ආරම්භ කර ඇත.

(ආ) (i) 2016 නොවැම්බර් ආරම්භ කර ඇති ඉදිකිරීම් කටයුතු දැනට සිදුවෙමින් පවතී.

(ii) නව පාලමේ ඉදිකිරීම් කටයුතු සඳහාම යොදා ගැනේ.

(iii) නැත.

(iv) අදාළ නොවේ.

(v) මෙම පාලමේ වැඩ කටයුතු 2016 වසරේ නොවැම්බර් මස 24වන දින JICA අරමුදල් යටතේ ආරම්භ කළ අතර, මේ වන විටත් මෙහි කටයුතු සිදු වෙමින් පවතින අතර, 2018 වසරේ අගෝස්තු මස අග වන විට පාලමේ ඉදිකිරීම් කටයුතු නිම කිරීමට නියමිතව ඇත.

(ඇ) අදාළ නොවේ.

 

பதில் தேதி

2017-07-26

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks