logo

03

E   |   සි   |  

 திகதி: 2017-02-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

1277/2017: வெளிநாடுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலாளர்கள் :விபரம்

1277/ '16

கௌரவ கஞ்சன விஜேசேகர,— கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) இலங்கையின் தேசிய பொருளாதாரத்தையும் அதேபோன்று இலங்கை மக்களையும் ஒரே விதத்தில் உரமூட்டுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற இலங்கையின் கடற்றொழிலாளர் சமுதாயம் தங்களது கைத்தொழிலை பெரும் தடைகளுக்கு மத்தியிலேயே பேணிவருகின்றார்கள் என்பதையும்;

(ii) இவர்கள் முகம்கொடுக்கும் பல்வேறுபட்ட இன்னல்களுக்கு மேலதிகமாக, சமுத்திர வளங்களை கொள்ளையிடும் வௌிநாட்டவர்களின் தொந்தரவு களையும் எதிர்கொள்ள நேரிட்டுள்ளதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) சர்வதேச சமுத்திர எல்லையை அத்துமீறியதன் காரணமாக வௌிநாடுகளில் கைதுசெய்யப்பட்ட இலங்கை கடற்றொழிலாளர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட கலங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

(ii) தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலாளர்களின் எண்ணிக்கை, கைதுசெய்து தடுத்துவைக்கப்பட்டுள்ள நாட்டிற்கேற்ப வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

(iii) இலங்கையின் சமுத்திர எல்லைகளை அத்துமீறியமையின் காரணமாக இந்நாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள வௌிநாட்டு கடற்றொழிலாளர்களின் எண்ணிக்கை அவர்கள் சார்ந்த நாட்டிற்கேற்ப தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

(iv) வௌிநாடுகளில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலாளர்களை விடுவித்துக்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-02-21

கேட்டவர்

கௌரவ கஞ்சன விஜேசேகர, பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2017-02-21

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks