01

E   |   සි   |  

 திகதி: 2017-09-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

1204/2017: அம்பாறை மாவட்ட நீர்ப்பாசன முறைமைகள்: விபரம்

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— நீர்ப்பாசன மற்றும் நீரக வளமூல முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) 1983 ஆண்டளவில் அம்பாறை மாவட்டத்தினுள் காணப்பட்ட,

(i) நீர்ப்பாசனங்களின் எண்ணிக்கை;

(ii) சிறு குளங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்களின் எண்ணிக்கை;

(iii) அவற்றின் மூலம் பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்ட விவசாய நிலங்களின் அளவு;

எவ்வளவென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) 1983 முதல் 2009 ஆம் ஆண்டில் யுத்தம் முடிவடையும் வரை நீர்ப்பாசனங்கள், குளங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்களை புனரமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தொகை ஆண்டு வாரியாக எவ்வளவென்பதையும்;

(ii) யுத்த நிலவரம் முடிவடைந்த பின்னர் 2015 ஆம் ஆண்டு வரை ஒட்டுமொத்த நீர்ப்பாசனங்கள், குளங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்களின் புனரமைப்புக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட பணத்தொகை ஆண்டு வாரியாக எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-09-20

கேட்டவர்

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-09-20

பதில் அளித்தார்

கௌரவ பாலித ரங்கே பண்டார, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks