பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மகாவலி கங்கையின் மினிப்பே அணைக்கட்டின் உயரத்தை 12 அடிகளால் உயர்த்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றதென்பதையும்;
(ii) இதன் காரணமாக சேருவில, மூதூர் மற்றும் வெருகல் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 22,500 ஏக்கர் காணிகள் நீர் கிடைக்காமையால் தாக்கத்துக்கு உள்ளாவதோடு, ஏறக்குறைய 80,000 கமக்காரர்கள் பாதிக்கப்படுவர் என்பதையும்;
(iii) இதற்கு முன்னர் இந்த அணைக்கட்டின் உயரம் 3 மீற்றர்களால் உயர்த்தப்பட்டதன் காரணமாக சேருவில, மூதூர், விஜிதபுர மற்றும் வெருகல் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த கமக்காரர்களுக்கு இரண்டு போகங்களிலும் பயிர்செய்ய இயலாமல் போயுள்ளதென்பதையும்;
(iv) அணைக்கட்டின் உயரத்தை 12 அடிகளால் உயர்த்துவதன் மூலம் அப்பிரதேச மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகின்றதென்பதையும்;
(v) மேற்படி விடயம் சம்பந்தமாக 2016.09.04 ஆந் திகதி திருகோணமலை நகரசபை மண்டபத்தில் 42 கமக்காரர் அமைப்புகள் ஒன்றுசேர்ந்து ஊடக சந்திப்பொன்றினை நடத்தியுள்ளதென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) இவ்விதமாக கமக்காரர்கள் பாதிக்கப்படுவார்களாயின், நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் எடுக்க எதிர்பார்க்கின்ற நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-05-24
கேட்டவர்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2017-05-24
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks